அமெரிக்கா சீனா பிரச்சனையால் பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போது இந்தியா பக்கம் படையெடுத்து வருகிறது. இதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தியாவை ஸ்மார்ட்போன் ஏற்றுமதி செய்யும் ஒரு உலகளாவிய தளமாக மாற்றவும் மத்திய அரசு இத்துறை நிறுவனங்களுக்குக் கூடுதல் தளர்வுகளை அறிவிக்க ஆலோசனை செய்து வருகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் ஆப்பிள், சாம்சங், ஹூவாய், வீவோ, ஓப்போ ஆகிய நிறுவனங்களுக்குத் தற்போது வரிச் சலுகை திட்டத்தில் கொடுக்கப்படும் 4 சதவீத தளர்வை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இலக்கு
இந்தியாவில் தற்போது ஸ்மார்ட்போன் ஏற்றுமதி சந்தையின் மதிப்பு 3 பில்லியன் டாலராக உள்ளது, இதை 2025ஆம் ஆண்டுக்குள்ள அதாவது அடுத்த 6 வருடத்திற்குள் 110 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் உயர்த்த தடுமாறும் நிலையில் 6 வருடத்தில் 3 மடங்க வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
வரிச் சலுகை
இந்த 3 மடங்கு வளர்ச்சி அடைய மத்திய அரசு தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் duty credit slip எனப்படும் வரிச் சலுகையை 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்த ஆலோசனை செய்து வருகிறது.
ஆனால் ஸ்மார்ட்போன் தாயரிப்பு நிறுவனங்களோ 8 சதவீதம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த duty credit slip சலுகையை நிறுவனங்கள் சுங்க வரி செலுத்தும் போதும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கட்டுப்பாடு
இதேபோல் புதிய தளர்வுகளைப் பெற நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதாகவும் தெரிகிறது. இதில் குறிப்பாக எந்த ஒரு நிறுவனம் தனது விநியோக முறையையும் இந்தியா முழுவதும் உருவாக்கி நாட்டை ஏற்றுமதி HUB-ஆக மாற்றும் நிறுவனங்களுக்குத் தான் இந்தச் சலுகையை அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதர காரணிகள்
இது மட்டும் அல்லாமல் மத்திய அரசு அளிக்க உள்ள கூடுதல் சலுகைகளைப் பெற வேண்டும் என்றால் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல், முதலீடு, தயாரிக்கப்படும் போனின் விலை, உற்பத்திக்காகச் செலவிடப்படும் தொகை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கூடுதல் சலுகையை அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications