டெல்லி: நாட்டில் எப்படிபட்ட நெருக்கடியான நிலை நிலவி வந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு,குறு தொழில் செய்வோருக்கு பல்வேறு வகையான திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
ஒரு புறம் கொரோனாவினால் தொழில்கள் முடங்கி போனாலும், அதிலிருந்து மீட்டெடுக்கவும், அரசின் இந்த ஊக்குவிப்பு திட்டங்கள் ஓரளவு பொருளாதாரத்தினை இதன் மூலம் மீட்டெடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் நம்புகிறார்கள்.
ஏனெனில் மக்களின் கையில் பணமே இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது தொழில் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கும்.
வணிகம் செய்யுங்கள்
ஆனால் அவர்களிடம், வங்கிகளில் கடன் வாங்குவதற்கான பிணையமாவது இருக்க வேண்டும். இதனாலேயே பெரும்பாலான திறமை உள்ளவர்கள் கூட, முடங்கி போகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் கைகொடுக்கும் விதமாக நாங்கள் இருக்கிறோம் நீங்கள் தைரியமாக வணிகம் செய்யுங்கள் என்று கூறியுள்ளது அரசு.
கடன் வாங்க பிணையம் வேண்டாம்
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் சிறு,குறு தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளில் கடனுதவி பெற அடமானமாக சொத்துக்கள் எதையும் காட்டத் தேவையில்லை. அந்த உத்தரவாதத்தை இனி அரசே வழங்கும். இதற்காக மூன்று லட்சம் கோடி அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு கடன் உதவி
அதோடு 45 லட்சம் சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு கடன் வழங்க 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு 4 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கடன்கள் வழங்கப்படும். இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இந்த கடனை 12 மாதங்கள் கழித்து தான் திரும்ப செலுத்தும் காலமும் தொடங்கும். அதோடு நெருக்கடியில் உள்ள சிறுகுறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில், சிறப்பு கடன் உதவிக்காக 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு குறு வணிகர்களுக்கு பயன் அளிக்கும்
அரசின் இந்த நடவடிக்கை சிறு குறு நிறுவனங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். இதன் மூலம் லாக்டவுனிற்கு பிறகு அவர்கள் மீண்டும் தங்கள் வணிக நடவடிக்கைகளை தொடர வழிவகுக்கும். இதனால் தொற்றூ நோயின் போது ஏற்படும் பணியிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். இதோடு சிறுகுறு நிறுவனங்களுக்கான வரையறைகளும் மாற்றப்பட்டுள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications