டெல்லி : அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியாவின் ஊழியர்கள், இந்த நிறுவனம் தனியார்மயம் ஆகும் வரை பாதுக்காக்கப்படுவார்கள் என்றும், அதுவரை பணி இழப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இது குறித்து பதிலளித்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அரசாங்கம் தனது அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியுள்ள நியாயமான ஒப்பந்தத்தை பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஏர் இந்தியா நிறுவனம் சரியான நேரத்தில் சம்பளம் வழங்காததால், பல விமானிகள் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற செய்தியையும் அவர் நிராகரித்தார்.
ஏர் இந்திய விமானிகளின் சம்பளம் நன்றாகத் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. மற்ற விமான நிறுவனங்களில் வழங்கப்படுவது போன்று தான் நல்லமுறையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் பூரி தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை ராஜினாமா சம்பந்தப்பட்ட எந்தவொரு வழக்கு பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிதி நெருக்கடியில் இருந்தபோது பல்வேறு ஊழியர்களின் 25 சதவிகித சம்பளம் நிறுதப்பட்டதாக பூரி கூறியுள்ளார். மேலும் தனியார்மயமாக்கல் அல்லது இந்த நிறுவனத்தில் முதலீடுகள் செய்யப்படுவதற்குள், நிலுவையில் உள்ள 25 சதவிகித தொகையும், அனைத்து ஊழியர்களுக்கும் திரும்ப செலுத்தப்படும் என்றும் பூரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தனியார்மயமாக்கல் முடியும் வரை, ஏர் இந்தியாவில் வேலை இழப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
தற்போதைய ஊழியர்கள் தொடர்பான பிரச்சனைகள், அவர்களின் உடல் நலப் பாதுகாப்பு, எத்தனை பேர் இருப்பார்கள், அடுத்து என்ன நடக்கும். அனைத்து ஊழியர்களுக்கும் சாதகமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நான் அந்த அளவுக்கு அதை எடுத்துச் செல்வேன் என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும் ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்படாவிட்டால், உங்கள் விமான நிறுவனத்தை மூட வேண்டி இருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். எப்படியோங்க ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பணி இழப்பு என்பது இல்லாமல் இருந்தால் சரிதான். ஒரு புறம் இதுபோன்ற அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவது மோசமான விஷயமாக கருதப்பட்டாலும், இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை காப்பாற்றப்பட உள்ளது என்று நினைக்கும் போது, எதுவும் சொல்வதற்கில்லை.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications