பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பேமெண்ட் சேவை நிறுவனமான ரேசர்பே-வில் ஹேக்கர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி சுமார் 7.3 கோடி ரூபாயை திருடியுள்ளனர்.
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் அனைத்து தளத்திலும் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் மக்களைப் பயமுறுத்துகிறது.
ரேசர்பே நிறுவனத்தில் என்ன நடந்தது..? வாங்க பார்ப்போம்..
Razorpay நிறுவனம்
ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் சுமார் 831 தோல்வியுற்ற பரிவர்த்தனைகளை, அங்கீகரிப்பதற்காக Razorpay மென்பொருளின் அங்கீகார செயல்முறையையே (authorisation process) திருடி சுமார் 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று பேமெண்ட் கேட்வே நிறுவனமான Razorpay காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
சைபர் கிரைம் பிரிவு
மே 16 அன்று தென்கிழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு அளித்த புகாரில், ரேஸர்பேயின் சட்ட சர்ச்சைகள் மற்றும் சட்ட அமலாக்கத் பிரிவு தலைவர் அபிஷேக் அபினவ் ஆனந்த், 831 பரிவர்த்தனைகளுக்கு எதிராக ரூ.7.38 கோடி அளவிலான தொகைக்கு நிறுவனத்தால் கணக்கு காட்டு முடியவில்லை என்று கூறியுள்ளார்.
Fiserv விளக்கம்
அதன் 'அங்கீகாரம் மற்றும் அங்கீகார கூட்டாளர்' நிறுவனமான Fiserv-ஐ தொடர்பு கொண்டபோது, இந்தப் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், அவை அங்கீகரிக்கப்படவில்லை என்றும் Razorpay க்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பணம் மாயமாகியுள்ளது என புகார் அளித்துள்ளது ரேசர்பே.
16 வணிகர்கள்
Fiserv-வின் விளக்கம் மற்றும் பதில்களை தொடர்ந்து, Razorpay ஒரு நிறுவனத்திற்குள்ளேயே உள் விசாரணையை நடத்தியது. இதில் 16 தனிப்பட்ட வணிகர்களுக்கு எதிராக இந்த ஆண்டு மார்ச் 6 முதல் மே 13 வரையிலான காலகட்டத்தில் "ரூ. 7,38,36,192" வரையிலான தொகையை 831 பரிவர்த்தனைகளில் மோசடி நடந்துள்ளது என கண்டறிந்துள்ளது.
831 பரிவர்த்தனை
831 பரிவர்த்தனைகளும் தோல்வி அடைந்த பண பரிமாற்றங்கள், ஆனால் இதை ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து பண பரிமாற்றத்தை ஒப்புதல் அளித்து பணத்தை திருடியுள்ளனர் என அபிஷேக் அபினவ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications