இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் லாபகரமாக இயங்கி வரும் வங்கிகளில் ஒன்று ஐசிஐசிஐ வங்கி என்பது தெரிந்ததே.
இந்த வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வங்கி புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி லாபகரமாக இயங்குவதற்கு முக்கிய காரணம் அதன் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சிஇஓ சந்தீப் பக்ஷி என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக்ஷி அவர்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஐசிஐசிஐ நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.
சந்தீப் பக்ஷி
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி முதல் முறையாக ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக்ஷி பதவி ஏற்றார். அதற்கு முன்பாக அவர் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார் என்பது குறிபிடத்தக்கது.
36 ஆண்டுகள்
அதுமட்டுமன்றி கடந்த 36 ஆண்டுகளாக ஐசிஐசிஐ வங்கி குடும்பத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் ஐசிஐசிஐ லிமிடெட், ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஆண்டுகள் நீட்டிப்பு
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் இயக்குனர் குழு சந்தீப் பக்ஷியை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் அறிவிப்பை ஐசிஐசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வங்கியின் ஒழுங்குமுறை தாக்கல் செபியிடம் வழங்கப்பட்டுள்ளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பதவிக்காலம்
இதன்படி சந்தீப் பக்ஷி அவர்களின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி வரை உள்ள நிலையில் தற்போது மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி வரை அவர் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications