சமீபத்திய காலமாக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பங்குகள் பரிசாக அறிவிப்பு என பல செய்திகளை படித்திருக்கிறோம். குறிப்பாக சில நிறுவன உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு வீடு, கார் என பரிசுகளை வாரி வழங்கி வருவதை படித்திருப்போம்.
அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தான் தற்போதும் அரங்கேறியுள்ளது. அதென்ன சம்பவம் வாருங்கள் பார்க்கலாம்.
ஐடிஎஃப்சி வங்கியின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வி வைத்தியநாதன், தன்னிடம் உள்ள 9 லட்சம் பங்குகளை தனது 5 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
வீடு வாங்க பரிசு
இந்த 9 லட்சம் பங்குகளின் மதிப்பு கிட்டதட்ட 4 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. எதற்காக இந்த பங்குகள் பரிசாக கொடுக்கப்பட்டன. யாருக்கு எவ்வளவு பங்குகள்? ஏன் தனக்கு சொந்தமான பங்குகளை வழங்கியுள்ளார் என பல கேள்விகள் எழலாம். 5 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பங்குகள் அவர்களுக்கு வீடு வாங்க வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
யாருக்கெல்லாம் பங்கு?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பொதுவாக ஒரு நிறுவனம் இதுபோன்ற பங்குகளை பரிசாக வழங்குகிறது எனில், அவர்கள் நிறுவனத்தின் டாப் பெர்பார்மராக இருப்பர். ஆனால் வைத்தியநாதன் பங்குகளை யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார் தெரியுமா? தன்னுடைய பயிற்றுனரான ராமேஷ் ராஜூக்கு 3 லட்சம் பங்குகளை கொடுத்துள்ளார்.
வீட்டு உதவியாளர் & கார் டிரைவர்
மேலும் தன்னுடைய வீட்டு உதவியாளர் பிரஞ்சால் நர்வேக்கருக்கு 2 லட்சம் பங்குகளும், கார் டிரைவர் அழகர் சாமிக்கு 2 லட்சம் பங்குகளையும், அலுவலக உதவியாளார் தீபக் பத்தாரேவுக்கு 1 லட்சம் பங்குகளையும், வீட்டு வேலை செய்யும் சந்தோஷ் ஜோகாலே1 லட்சம் பங்குகளையும் பரிசாக கொடுத்துள்ளார். இந்த பங்குகளின் இன்றைய மதிப்பு 3.95 கோடி ரூபாயாகும். ஒரு பங்கின் விலை 43.9 ரூபாயாக உள்ளது.
சமூக நல அறக்கட்டளைக்கு பங்கு
இவ்வாறு பரிசாக பங்குகளை பெற்றவர்கள் யாரும் வைத்திய நாதனுக்கு உறவினர்கள் அல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ருக்மணி சமூக நல அறக்கட்டளைக்கு ஆதரவாக 2 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு உதவி
இது வைத்திய நாதனின் இந்த நெகிழ்ச்சியான உதவியானடு முதல் முறை அல்ல. ஏற்கனவே இது போன்ற உதவிகளை ஊழியர்களுக்கு செய்துள்ளார் என்பதும் நினைவுகூறத்தக்கது. கடந்த 2021ல் தன்னிடம் இருந்த 2.43 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.50 லட்சம் பங்குகளை, 3 பேருக்கு வீடு வாங்க பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரம் என்ன?
தற்போது என்எஸ்இ-யில் 2.28% சரிவினைக் கண்டு. ஐடிஎஃப்சி பங்கின் விலையானது, 42.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 43.35 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 42.50 ரூபாயாகவும் உள்ளது.
இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது 2.28% குறைந்து, 42.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 43.30 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 42.55 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 69.30 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 40.75 ரூபாயாகவும் உள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?
தற்போதைய நிலவரப்படி, (12.19 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 786.1 புள்ளிகள் குறைந்து, 56,897 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 235.25 புள்ளிகள் குறைந்து, 16,971.40 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இது இன்று காலை அமர்வில் 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications