ஒவ்வொரு வருடமும் பன்னாட்டு நிறுவனங்களின் கார்பரேட் வரி மோசடி மற்றும் தனிநபர்களின் வரி ஏய்ப்பு ஆகியவற்றின் காரணமாக உலக நாடுகள் சுமார் 427 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை இழந்து வருகிறது.
இந்தத் தொகையை வைத்து நாட்டின் மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர் பணியைச் செய்யும் 3.4 கோடி செவிலியர்களுக்கு ஒரு வருடச் சம்பளத்தைக் கொடுக்க முடியும் என State of Tax Justice ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதில் இந்தியாவிற்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 10.3 பில்லியன் டாலர் அதாவது 75,000 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்தை இழந்து வருகிறது என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியா ஜிடிபி
இந்திய அரசு தனது வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் 2.8 டிரில்லியன் டாலர் ஜிடிபி-யில் 0.41 சதவீதம் அதாவது 10.3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை வரி ஏய்ப்பு மூலம் இழந்து வருகிறோம்.
பன்னாட்டு நிறுவனங்கள்
State of Tax Justice ஆய்வறிக்கையின் படி இந்தியா இழக்கும் 10.3 பில்லியன் டாலர் அளவிலான வரி வருமானத்தில் 10 பில்லியன் டாலர் வருமானம் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் வரி ஏய்ப்பு வாயிலாக மட்டுமே இழந்து வருகிறோம்.
மேலும் 200 மில்லியன் டாலர் அளவிலான தொகை மட்டுமே தனிநபர் செய்யும் வரி ஏய்ப்பு மூலம் இந்தியாவிற்கு நஷ்டம் அடைகிறது.
சுகாதாரம் மற்றும் கல்வி
இந்தியா ஒவ்வொரு வருடமும் இழக்கும் இந்த 10.3 பில்லியன் டாலர் தொகையின் மூலம் நாட்டின் சுகாதாரப் பட்ஜெட் தொகையில் 44.70 சதவீதம், கல்விக்கான பட்ஜெட் தொகை ஒதுக்கீட்டில் 10.68 சதவீதம்.
இதுமட்டும் அல்லாமல் இந்தத் தொகையை வைத்து சுமார் 42.30 லட்ச செவிலியர்களுக்கு ஒரு வருடச் சம்பளம் கொடுக்க முடியும்.
அன்னிய முதலீடு
இந்தியா பெருமளவிலான வரியைப் பன்னாட்டு நிறுவனங்களின் வாயிலாக மட்டுமே இழக்கும் நிலையில், இதில் பெரும் பகுதி வரி அன்னிய முதலீடுகளின் வாயிலாக இழந்து வருகிறது என State of Tax Justice ஆய்வறிக்கை கூறுகிறது.
அதிலும் முக்கியமாக வர்த்தகக் கூட்டணி நாடுகளான மொரீஷியஸ், சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் முதலீட்டின் வாயிலாக இழக்கிறது.
தனிநபர்
தற்போது மத்திய அரசு தனிநபர் வருமான வரி ஏய்ப்பை குறைக்கப் பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இப்பிரிவு மூலம் ஏற்படும் வருமான இழப்பை மத்திய அரசு பெரிய அளவில் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications