கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கட்டுபாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கிடையிலும் சற்று ஆறுதல் கொடுக்க கூடிய விஷயம் என்னவெனில், தடுப்பூசி நடைமுறைக்கு வந்துள்ளது தான்.
ஒரு புறம் ஆறுதல் கொடுத்தாலும், தாக்கம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசியின் விலையும் இனி வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சீரம் நிறுவனம் இன்று தடுப்பூசி விலையை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், இதே தனியாருக்கு 600 ரூபாய்க்கும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
மே 1ல் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே பல இடங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், மே, ஜூன் மாதங்களில் இன்னும் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறைவு தான்
மருந்து உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிப்பதாக கூறியுள்ள நிலையில், அமெரிக்க ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசியின் விலையை ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான் என சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. மேலும் இன்னும் 4 - 5 மாதங்களில் சில்லறை விற்பனையிலும் தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
விலை ஏற்றம் காணலாம்
எனினும் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தடுப்பூசியானது, 1000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படலாம். ஏனெனில் இது தேவை அதிகரிக்கும்போது விலை இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது. .
போட்டி உருவாகலாம்
குறிப்பாக ஜூன் மாதத்திற்குள் இந்தியாவில் 200 மில்லியன் வரை உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. தற்போது சீரம் மற்றும் பாரத் பயோடெக் மற்றும் ஸ்புட்னிக் உள்ளிட்டவற்றை அனைத்தும் சேர்ந்து 70 மில்லியனாக உள்ளது. இதே நேரத்தில் தேவையும் அதிகரித்து வருவதால், இது ஒரு போட்டித் தன்மையை உருவாக்கலாம். இதனால் விலையும் அதிகரிக்கலாம். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகளவில் தேவை உள்ளதால் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications