பிலிப்பைன்ஸின் மணிலாவை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது தான் ஆசிய வளர்ச்சி வங்கி, நகர்புறங்களில் ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து ஒரு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் 13 மாநிலங்களில் 256 மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். இதில் குடிசை பகுதிகளைச் சேர்ந்த 51 மில்லியன் மக்கள் உள்ளனர்.
இது குறித்தான விரிவான ஒப்பந்தத்தில், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ரஜத் குமார் மிஸ்ரா இந்திய அரசின் சார்பில் கையெழுத்திட்டுள்ளார்.
எதற்காக கடன் ஒப்பந்தம்
இதே ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய பிரிவு இயக்குனர் டேக்கோ கோஜிஷி வங்கியின் சார்பிலும் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் நகர்புறங்களில் தொற்று நோய்க்கான தயார் நிலையை வலுப்படுத்துவதற்கான உள்ளக்கட்டமைப்பை வசதிகளை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன திட்டங்கள்
இந்த திட்டத்தின் மூலம் இந்திய அரசின் முக்கிய சுகாதர திட்டங்களான ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் மற்றும் வெல்நெஸ் மையங்கள் (AB - HWC) மற்றும் பிரதான் மந்திரி ஆத்ம நிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா (PM - ASBY), இந்த திட்டம் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன் (PM - ABHIM) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்களை மேம்படுத்த உதவும் என மிஸ்ரா கூறியுள்ளார்.
சுகாதார பாதுகாப்பு மேம்படுத்தல்
2018ல் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவில், உலகளாவிய சுகாதார பாதுகாப்பினை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.
நாட்டில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் தான் இந்திய அரசு சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த கடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பல சவால்கள்
இந்தியாவில் கொரோனாவின் மத்தியில் சுகாதார கட்டமைப்பு துறையில் பல சவால்கள் நிலவி வந்தது. இதனை போன்று வேறு பிரச்சனைகள் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால், அதனை சமாளிப்பது மிகவும் முக்கியமானது. ஆக பாதுகாப்பினை உறுதி செய்வது மிக முக்கியமானது என்றும் கோனிஷி கூறியுள்ளார்.
13 மாநிலங்களில் மேம்படுத்தல்
ஆந்திர பிரதேசம், அசாம், சத்தீஷ்கர், குஜராத், ஹரியானாம் கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள நகர்புறங்களில் இந்த திட்டம் மூலம் விரிவாக்கம் செய்யப்படும். குறிப்பாக தொற்று நோய் அல்லாத சேவைகள், சமூக நலன் சார்ந்த சேவைகள், குறிப்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றினையும் மேம்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications