கொரோனா காலத்தில் பல துறைகள் முடங்கி பல் தொழிலாளார்கள் வேலையிழந்து தவித்து வந்த நிலையில், ஐடி துறையில் மட்டும் எதிர்மாறாக, புதிய பணியமர்த்தல், சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு என புத்துணர்ச்சியுடன் இயங்கி வந்தது.
சொல்லப்போனால் கொரோனாவுக்கு முன்பை விட, நன்றாகவே செயல்பட ஆரம்பித்துள்ளன எனலாம்.
கடந்த சில காலாண்டுகளாக ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து வலுவான வளர்ச்சியினை பதிவு செய்து வருகின்றன.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
இந்த வளர்ச்சி விகிதமானது இன்னும் சில காலாண்டுகளுக்கு தொடரலாம். இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் எம்கே ரிசர்ச் நிறுவனம், ஐடி நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளன. இந்த வளர்ச்சி விகிதமானது அடுத்து வரும் காலாண்டுகளிலும் தொடரலாம் என கணித்துள்ளது.
அதிகரித்து வரும் தேவை
ஐடி துறையினரின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வளர்ச்சி விகிதமானது நிலையானதாக இருக்கும். குறிப்பாக ஐடி துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்ஸ், டிஜிட்டல் மாற்றங்கள், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றின் தேவையானது மிக அதிகரித்து வருகின்றது.
வளர்ச்சி விகிதம்
டயர் 1ல் இருக்கும் ஐடி நிறுவனங்கள் முதல் காலாண்டில் 0.9% - 12.2% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன. ஆக இந்த முதல் காலாண்டில் காணும் வளர்ச்சி விகிதமானது, நடப்பு நிதியாண்டு முழுவதும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறைகளில் நல்ல வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஃபோசிஸ் கணிப்பு
நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நடப்பு நிதியாண்டில் அதன் வளர்ச்சி விகிதத்தினை முன்பாக 12 - 14% ஆக இருந்த நிலையில், தற்போது அந்த விகிதத்தினை 14 - 16% ஆக அதிகரித்துள்ளது.
Array
இதே போல ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளது.
இதே விப்ரோ நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதமானது இரண்டாவது காலாண்டில் 5 - 7% வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலை அதிகரிக்கலாம்
நிறுவனங்கள் தங்களது வளர்ச்சி கணிப்பினை அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி கணிப்பாக பார்க்கப்படுகிறது. ஆக முதல் காலாண்டு வளர்ச்சி விகிதத்தினை போல, அடுத்து வரும் காலாண்டுகளிலும் அதன் வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் இந்த நிறுவன பங்குகளின் விலையானது நடப்பு ஆண்டில் வளர்ச்சி காணும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சவாலாக அமையலாம்
எனினும் அதிகரித்து வரும் தேவைகளுக்கு மத்தியில் நிறுவனங்கள், தேவையை தக்க வைத்துக் கொள்ள, சம்பள விகிதங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும். பணியமர்த்தலை அதிகரிக்க வேண்டும். அட்ரிசன் மிக கவலையளிக்கும் விஷயமாக உள்ள நிலையில், இது நிறுவனங்களுக்கு சவாலாக அமையலாம். இதனால் நிறுவனங்களுக்கு செலவினங்கள் அதிகரிக்கலாம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
இன்றைய பங்கு விலை நிலவரம் என்ன?
TCS நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 1.32% அதிகரித்து, 3,720.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
Wipro நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 0.95% அதிகரித்து, 634.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
HCL tech நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 0.39% குறைந்து, 1,162.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
Infosys நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 1.09% குறைந்து, 1,708.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
Tech Mahindra நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 0.28% குறைந்து, 1,445.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
Mphasis ltd நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 5.52% அதிகரித்து, 2,894.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
Larson & turbo InfoTech ltd நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 1.87% அதிகரித்து, 5,233.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications