தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் முதல்வருக்கு 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படுவது குறித்து வெளியான அறிவிப்பு சமுக வலைத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்குழுவில் பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள், கட்டுப்பாடுகளை விரும்பாதவர்கள் 3 பேர் தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனை குழுவில் இணைந்துள்ளனர். இது சமுகவலைதளத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் விருப்பம் இல்லாமல் தங்களது பதவிகளிலிருந்து வெளியேறிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமனியன் ஆகியோரும். மோடி அரசு குறித்து அவ்வப்போது எதிர்க் கருத்து தெரிவிக்கும் அபிஜித் பானர்ஜி மனைவியும் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ ஆகியோர் தமிழ்நாட்டின் புதிய பொருளாதார ஆலோசகர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கு லாபம்
இதற்கு ட்விட்டரில் இந்தியாவின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கு லாபமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளைக் களையும் புதிய பொருளாதார ஆலோசனை குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையேற்கிறார் என ட்வீட் செய்யப்பட்டு உள்ளது.
பொருளாதார ஆலோசனைக் குழு
பல நட்சத்திரங்கள்..!! தமிழ்நாடு ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் த்ரே, இந்தியாவின் முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன் ஆகியோர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
தமிழ்நாடு என்ன தனி நாடா..?
தமிழ்நாடு என்ன தனி நாடா..? ரகுராம் ராஜன் ஆலோசனை இருந்தால் மாநிலம் தனியாகச் சாதித்து விடுமா..? ஒன்றிய அரசின் தேவை இனி தமிழ்நாட்டில் இல்லையா...? என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும், ரகுராம் ராஜன் அவர்களும் ஒன்றிணைந்துச் செயல்பட்டாலே பலன் அளிக்கும். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த முடிவை ஏற்றுக்கொள்வார் என நம்புவோம். மொத்தமாகத் தமிழ்நாடு அரசு புதிய குழுவை அமைத்தது மிகவும் சிறப்பான முடிவு
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
இதுதான் தமிழ்நாடு
இதுதான் திராவிடம்
இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி
தமிழ்நாடு அரசு
பொதுவாகத் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட, நீக்கப்பட்ட அறிஞர்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
ஏனென்றால், ஒன்றிய அரசு நாட்டின் இழப்புகளுக்குக் கடவுளையும் ஈர்ப்பு விசையையும் குறை கூறும் நபர்களை மட்டுமே பணியில் வைத்துக்கொள்ள விரும்புகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications