சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் மெட்ரோ ரயில் என்பது பயணிகளின் விருப்பத்திற்குரிய ஒரு அம்சம் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்தியாவில் மெட்ரோ ரயில் பூமிக்கு அடியிலும் பூமிக்கு மேலேயும் இயங்கிவரும் நிலையில் தற்போது முதல் முறையாக தண்ணீருக்கு அடியிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
கொல்கத்தாவில் ஹூக்ளி நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாகவும் இது இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் தண்ணீருக்கு அடியில் இயங்கும் மெட்ரோ ரயில் பாதை என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த திட்டத்திற்காக ரூபாய் 8,600 கோடி செலவிடப்பட்டு வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டு இதில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கொல்கத்தா மெட்ரோ
இந்தியாவிலேயே முதன்முதலாக, கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு நடைபாதை 16.6 கிலோமீட்டர் நீளமும், ஹூக்ளி ஆற்றின் அடியில் 500 மீட்டர் நீளமும், ஆற்றுப்படுகைக்கு கீழே 33 மீட்டர்களும் இருக்கும்.
பயண நேரம் குறையும்
இந்த ரயில் பயணிகளின் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும். கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த திட்டத்தை கேஎம்ஆர்சி என்ற நிறுவனம் அமைத்து வருகிறது. மத்திய கொல்கத்தா வழியாக ஹவுராவிலிருந்து சால்ட் லேக் வரை இந்த மெட்ரோ பாதை இயக்கப்படும்.
சிறப்பு அனுபவம்
இரட்டை சுரங்கப்பாதைகள் 1.4 மீ அகலமுள்ள கான்கிரீட் வளையங்களிலிருந்து கட்டப்பட்டுள்ளன. இந்த இரட்டை சுரங்கப்பாதைகள் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக உள்ளன. ஏனெனில் அவை தண்ணீருக்கு கீழே அரை கிலோமீட்டர் வரை ஜிப் செய்வதன் மூலம் ஒரு வகையான சிறப்பு அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குகின்றன.
அவசரகால பாதைகள்
சுரங்கப்பாதைகளுக்குள் நீர் நுழைவதைத் தடுக்க ஹைட்ரோஃபிலிக் கேஸ்கட்கள் நிறுவப்பட்டுள்ளன. நிலநடுக்கம் போன்ற சூழ்நிலைகளுக்கு சுரங்கப்பாதைகளில் அவசரகால வெளியேற்றங்களும் இருக்கும் என்பதும், அவசர காலங்களில் பயன்படுத்த சிறப்பு வழிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் பாதுகாப்பு
எதிர்பாராதவிதமாக நீருக்கடியில் மெட்ரோ சென்று கொண்டிருக்கும்போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், பயணிகள் தப்பிக்க சில சிறப்பு பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. சுரங்கப்பாதையை நீர்ப்புகா மற்றும் நீருக்கடியில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாற்ற, கான்கிரீட் வடிவமைப்பில் உள்ள மைக்ரோ-சிலிக்கா பயன்படுத்தப்படுகிறது.
நிலத்தடி நிலையங்கள்
எஸ்பிளனேட், மஹாகரன், ஹவுரா மற்றும் ஹவுரா மைதானம் ஆகிய நான்கு நிலத்தடி நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. மஹாகரன் மற்றும் ஹவுரா நிலையங்களுக்கு இடையே ஹூக்ளி ஆற்றை ஒரு நிமிடத்திற்குள் மெட்ரோ ரயில் கடக்கும்.
2023ல் இயங்கும்
2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மெட்ரோ திட்டம் தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் 4876 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி சுமார் 8,600 கோடி செலவு செய்யப்படுகிறது. இன்னும் 20 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications