பெங்களூரு: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலி எண்ணிக்கையும் கிட்டதட்ட நூறினைத் தொடும் நிலையில் உள்ளது.
Recommended Video
அதிலும் நாடும் முழுவதும் கொரோனாவால் தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரத்தில், பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு முக்கிய துறையும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதில் தப்பி தவறி ஐடி துறை மட்டும் ஏதோ கொஞ்சம் இயங்கி வருகிறது. ஏனெனில் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு கூறி வருகின்றனர்.
ஒர்க் பிரம் ஹோம் வசதி இல்லை
ஆனால் பெரு நிறுவனங்களில் இது போன்ற பல வசதிகள் இருந்தாலும், சிறு சிறு ஐடி நிறுவனங்களில் இதுபோன்ற ஓர்க் பிரம் ஹோம் வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கொரோனாவின் தொற்றினால் 2020ம் ஆண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறை மிகவும் எதிர்மறையான அல்லது பிளாட் ஆன வளர்ச்சியைக் காணலாம் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார்.
செலவினங்களை குறைக்கலாம்
மேலும் 2008ல் நீங்கள் கண்டதை விட (உலகளாவிய நிதி நெருக்கடி) மிக மோசமான நிலையை காணப் போகிறீர்கள். ஏனெனில் தற்போதைய நிலையில் உங்களது வாடிக்கையாளர்கள் செலவினங்களை தற்போதைக்கு அதிகரிக்கவும் போவதில்லை. தற்போதைய செலவினங்களை பராமரிக்கவும் போவதில்லை. இன்னும் உண்மையை சொல்லப்போனால் தங்களது செலவினங்களை குறைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மோசமாக பாதிப்பு
முக்கியமான துறைகள் மற்றும் நிதி சம்பந்தமான துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் கூட கொரோனா தாக்கத்தினால் வேலையின்மை விகிதம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. பொருளாதாரங்கள் மோசமாக செயல்படுகின்றன. இதனால் செலவுகள் அதிகரிக்க போவதில்லை. ஆக இந்த ஆண்டு ஐடி துறைக்கும் கடினமான ஆண்டாகத் தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
நேர்மறையான வளர்ச்சி
நடப்பு சூழ்நிலையில் எந்தவொரு வணிக தொடர்ச்சியான திட்டமிடலும் உதவாது. மேலும் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில் செலவினையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆக இப்படி ஒரு சூழ்நிலையில் நேர்மறையான வளர்ச்சியினை கொண்டிருந்தால், அது மிக ஆச்சரியமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications