கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு உள்ளது என்பதும் பணவீக்கம் அதிகமாகி உள்ளது என்பதும் தெரிந்ததே.
இதன் காரணமாக பெரிய ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக அந்நிறுவனங்கள் செலவுகளை குறைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவின் சிப்மேக்கர் நிறுவனமான இண்டெல் தனது 20 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இண்டெல்
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான இண்டெல் தனது நிறுவனத்தின் செலவுகளை குறைக்கவும் லாபத்தின் சரிவை சமாளிப்பதற்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்றாம் காலாண்டு அறிக்கை
அக்டோபர் 27-ஆம் தேதி இண்டெல் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு அறிக்கை வெளியிடப்பட உள்ள நிலையில் காலாண்டு அறிக்கைக்கு பின்னர் வேலை நீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20% ஊழியர்கள்
தற்போதைய நிலவரப்படி இண்டெல் நிறுவனத்தில் 113,700 பணியாளர்கள் இருக்கும் நிலையில் இதில் சுமார் 22 ஆயிரம் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பணவீக்கம்
கடந்த சில மாதங்களாக உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட விற்பனை சரிவு ஆகியவை காரணமாக இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பொருளாதார ரீதியில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. எனவே செலவை குறைப்பதற்காக ஊழியர்களை வேலை நீக்கம் உள்பட ஒரு சில முக்கிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கூகுள் - மைக்ரோசாப்ட்
ஏற்கனவே கூகுள் மற்றும் மைக்ரோ சாப்ட் ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது இண்டெல் நிறுவனமும் வேலை நீக்கம் செய்ய முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அந்நிறுவனத்தில் ப


Click it and Unblock the Notifications