ரூ.63,000 இழப்பீடு தரப்படும்.. தாமதத்திற்கு தக்க பதிலடி கொடுத்த ஐஆர்சிடிசி.. இது நல்லா இருக்கே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆமதாபாத் - மும்பை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஆமதாபாத்தில் இருந்த மும்பைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மும்பைக்கு வந்து சேர்ந்தது.

 

ஆமதாபாத் - மும்பை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 630 பயணிகளுக்கு தலா 100 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக இந்தியா ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

 
ரூ.63,000 இழப்பீடு தரப்படும்.. தாமதத்திற்கு தக்க பதிலடி கொடுத்த ஐஆர்சிடிசி.. இது நல்லா இருக்கே..!

ஆமதாபாத்தில் புதங்கிழமையன்று காலை 6.42 மணிக்கு அந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த நிலையில் புதன் கிழமை மதியம் 1.10 மணிக்கு அந்த ரயில் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மதியம் 2.36 மணிக்குத்தான் அந்த ரயில் மும்பை வந்து சேர்ந்தது.

ஏனெனில் அந்த ரயில் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பயந்தர் மற்றும் தஹிசார் நிலையங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தேஜஷ் ரயில் மற்றும் புற நகர் மற்றும் வெளி ரயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. மும்பையின் புறநகர் பகுதிகளில் உள்ள பயந்தர் மற்றும் தஹிசார் நிலையங்களுக்கு இடையிலான தொழில் நுட்ப சிக்கல் காரணமாக பிற்பகல் 3.30 மணி வரை குறைந்தது எட்டு புற நகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வர முடியாமல் தாமதம் ஏற்பட்டது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்து சேர்ந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கொள்கை வரையறை செய்யப்பட்டுள்ளது. ரயில் 1 மணி நேரம் தாமதமானால் தலா ரூ.100 இழப்பீடும், 2 மணி நேரம் தாமதமானால் தலா ரூ.200 இழப்பீடும் கொடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேஜஷ் ரயில் 1 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால், ஒவ்வொரு பயணிக்கும் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRCTC officially said pay around Rs.63,000 as compensation for late running of Tejas express

IRCTC said pay compensation Rs.100 each to 630 passengers for late running of Tejas express. This train reached the Mumbai Central station around 1 hour and 30 minutes late.
Story first published: Thursday, January 23, 2020, 14:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X