இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தாலும், சர்வதேச சந்தையும் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்காத காரணத்தால் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாமல் தங்கம், கச்சா எண்ணெய் மற்றும் நாணய சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த மோசமான சூழ்நிலையிலும் சில முக்கியப் பங்குகள் அதிரடியான வளர்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்களைப் பண மழையில் கொண்டாட வைத்துள்ளது.
ஆம், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஐஆர்சிடிசி நிறுவனம் கடந்த 4 மாதத்தில் மட்டும் சுமார் 500 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முதலீட்டாளர்களின் நம்பிக்கை
இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களத்தில் இறங்கிய ஐஆர்சிடிசி நிறுவனம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு லாபத்தையும் வளர்ச்சியையும் கொடுத்துள்ளது இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு.
320 ரூபாய்
2019ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தையில் ஐஆர்சிடிசி நிறுவனம் ஒரு பங்கின் விலை 320 ரூபாய் என்ற விலைக்கு ஐபிஓ சந்தையில் முதலீட்டாளர்களுக்குத் தனது பங்குகளை விற்பனை செய்தது. முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்ற காரணத்தால் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது சுமார் 101.25 சதவீத வளர்ச்சியில் 644 ரூபாய் என்ற விலைக்குப் பட்டியலிடப்பட்டது.
52 வார வளர்ச்சி
அதன் பின்பு படிப்படியான வளர்ச்சி என இந்நிறுவனத்தின் பங்கு விலை மளமளவென உயர்ந்து கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவன பங்குகள் சுமார் 1976 ரூபாய் என்ற 52 வார உயர்வை எட்டியது. இது கிட்டதட்ட 500 சதவீத வளர்ச்சி.
500 சதவீத வளர்ச்சி
அதாவது ஐஆர்சிடிசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்டபோது இப்பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் சுமார் 500 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 4 மாதங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் இப்போது 5 லட்சம் ரூபாய்க் கிடைத்திருக்கும்.
இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் நீங்களாக இருந்தால் கமெண்ட் பதிவு செய்யுங்கள்.
லாபம், வருவாய், விற்பனை
ஐஆர்சிடிசி நிறுவனம் கடந்த வரும் வெறும் 73.60 ரூபாய் லாபம் பெற்று இருந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் 205.80 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. இது கிட்டதட்ட 179.6 சதவீத வளர்ச்சி.
இதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் 310.16 சதவீதம் வளர்ச்சி அடைந்து 226.90 கோடி ரூபாய் பெற்றுள்ளது, இதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை 64.6 சதவீதம் வளர்ச்சி அடைந்து 715.98 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications