பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொத்துறை நிறுவனங்களையும், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களையும் தனியார்மயமாக்கும் திட்டத்தில் தீவிரமாக இருக்கும் வேளையில், தனது பட்ஜெட் அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்திற்கு ஏற்கனவே வங்கி ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வங்கி தனியார்மயமாக்கலில் இருக்கும் முக்கியமான கட்டுப்பாட்டை விலக்க புதிய மசோதா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடக்கயிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பொதுத்துறை வாங்கிகளை மொத்தமாக விற்பனை செய்து தனியார்மயமாக்கும் மசோதாவை நிதியமைச்சகம் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்காலக் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மசோதாவில் பொத்துறை வங்கிகளில் மத்திய அரசு வைத்துள்ள பங்குகளை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வெளியேற வழிவகுக்கும் முக்கியமான மசோதா இடம்பெற உள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசு
தற்போது மத்திய அரசு ஒரு பொத்துறை வங்கியை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் வங்கி நிறுவனங்கள் (பங்கீடுகளைக் கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970 கீழ், பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்சம் 51% பங்குகளை மத்திய அரசு வைத்திருக்க வேண்டும்.
26% பங்குகள் கட்டுப்பாடு
தனியார்மயமாக்கலின் போது குறைந்தபட்சம் 26% பங்குகளை மத்திய அரசு வைத்திருக்க வேண்டும் என்றும், இதைப் படிப்படியாகக் குறைக்கலாம் என்று முன்பு திட்டமிடப்பட்டது. இதேபோல் தனியார் வங்கிகள் ப்ரோமோட்டர்கள் 26 சதவீத பங்குகளை வைத்திருக்க முடியும்.
100 சதவீத பங்குகள் விற்பனை
இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்படும் மசோதா மூலம் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசுக்கு வழிவகுக்கும். இதனால் வங்கிகளை வாங்க முன் வருபவர்களின் எண்ணிக்கையும், போட்டியும் அதிகரிக்கும். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
IDBI
விரைவில் மத்திய அரசிடம் இருக்கும் IDBI-யின் 45.48 சதவீத பங்குகளை விற்பனை செய்ய விலை விண்ணப்பத்தை மத்திய அரசு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.எல்ஐசி நிறுவனம் சுமார் 49.24 சதவீத பங்குகளை IDBI-யில் வைத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications