கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழல் என்பது பெரிதும் மாறியுள்ளது. பல துறைகளிலும் வீட்டில் இருந்து பணிபுரியும் போக்கு அதிகரித்துள்ளது.
எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பல துறை சார்ந்த நிறுவனங்களும் மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளன.
இதற்கிடையில் இது குறித்து இவந்தி சாப்ட்வேர் நிறுவனம் ஆய்வினை நடத்தியுள்ளது. அதில் வெளியான சுவாரஷ்ய பதில்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
71% பேர் WFH ஆப்சன் போதும்
இதில் வெளியான பதிலளித்தவர்களில், 71% பேர் தங்களுக்கு பதவி உயர்வும் கூட வேண்டாம். ஆனால் வீட்டில் இருந்து பணிபுரியும் ஆப்சன் கொடுக்க வேண்டும் என விரும்புவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதே 42% பேர் ஹைபிரிட் மாடல் பணியினை விரும்புவதாகவும், அதில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆபிஸ் வருவது தான் ஹேப்பி
இதே 30% பேர் நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதையே விரும்புவதாகவும், 13% பேர் மட்டுமே அலுவலகத்திற்கு முழு நேரம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதே பெருந்தொற்று காலத்தில் கிரேட் ரெசிக்னேஷன் பற்றி கூறியவர்கள், கட்டுபாடுகள் அதிகம் இருந்த காலகட்டத்தில் ஊழியர்களுக்கு தங்களது பணியினை மாற்ற எளிதாக வாய்ப்புகள் அமைந்து விட்டது. பதிலளித்தவர்களில் 24% பேர் தங்களது பணியினை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கலாம்
இதற்கிடையில் அடுத்த 6 மாதங்களில் 28% பேர் தங்களது பணியில் இருந்து வெளியேறலாம். அதன் பிறகு 36% பேராக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு வெளியேறும் ஊழியர்கள் வேண்டுமானாலும் சென்று, யாருக்காக வேண்டுமானாலும் பணிபுரியலாம். ஆக நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள தங்களது யுக்திகளை மாற்ற வேண்டும்.
பெரிய கவலைகள்
எனினும் இந்த ஆய்வில் 10% பேர் வீட்டில் இருந்து பணிபுரிவது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், அவர்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தினை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதோடு சக ஊழியர்களுடனான தனிப்பட்ட சுதந்திரத்தினை இழப்பதாகவும், வீட்டில் இருந்து பணிபுரியும்போது அதிக நேரம் பணி புரிவதாகவும் இது அவர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகவும் உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications