கடந்த 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி, இந்திய பாராளுமன்றத்தின் தனிப் பெரும்பான்மை உடன், ஆட்சிக்கு வந்தது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அவர்கள் செய்த சில மிக நல்ல திட்டங்களில் ஒன்று தான் இந்த பிரதான் மந்திரி ஜன் தன் திட்டம்.
இந்த திட்டத்தின் கீழ், நிறைய ஏழை எளிய மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதை நாம் அறிவோம்.
அறிக்கை
'The real story of women's financial inclusion in India' என்கிற தலைப்பில் மைக்ரோ சேவ் கன்சல்டிங் (Microsave Consulting) என்கிற அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிகையில் அப்படி என்ன சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள் என ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
77 சதவிகித பெண்கள்
2014-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் சுமார் 43 சதவிகித பெண்களுக்கு தான் சொந்தமாக வங்கிக் கணக்கு இருந்ததாம். ஆனால் 2017-ம் ஆண்டு வாக்கில் சுமார் 77 சதவிகித இந்திய பெண்களுக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு இருக்கிறதாம். அதோடு Financial Inclusion விகிதத்திலும் இந்தியா முன்னேறி இருக்கிறதாம்.
ஆண் பெண் விகிதம்
Financial Inclusion என்றால், இந்தியாவின் நிதி சேவைகளில் அனைவரும் இணைக்கப்பட வேண்டும் என்பது தான். பிரதமரின் ஜன் தன் திட்டத்தால், இந்த Financial Inclusion-ல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் இருந்த இடைவெளியை சுமாராக 14 சதவிகித புள்ளிகள் குறைத்து இருக்கிறதாம்.
வங்க தேசம் & பாகிஸ்தான்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்களுக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு இருப்பது அதிகமாக இருக்கிறதாம். வங்கதேசத்தில் 36 % மற்றும் பாகிஸ்தானில் 7 % பெண்களுக்கு மட்டுமே சொந்தமாக வங்கிக் கனக்கி இருக்கிறதாம்.
செயல்படாத கணக்குகள்
அதே நேரத்தில், இந்தியாவில், பிரதான் மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட சில பல கணக்குகள் செயல்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறது மைக்ரோ சேவ் கன்சல்டிங் நிறுவனத்தின் அறிக்கை. வங்கிக் கணக்கை வைத்திருப்பது எல்லாம் ஓகே, இப்போது அந்த வங்கிக் கணக்கில் பணம் புழங்க வேண்டுமே. அதற்கும் அரசு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications