கடந்த 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி, இந்திய பாராளுமன்றத்தின் தனிப் பெரும்பான்மை உடன், ஆட்சிக்கு வந்தது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அவர்கள் செய்த சில மிக நல்ல திட்டங்களில் ஒன்று தான் இந்த பிரதான் மந்திரி ஜன் தன் திட்டம்.
இந்த திட்டத்தின் கீழ், நிறைய ஏழை எளிய மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதை நாம் அறிவோம்.
அறிக்கை
'The real story of women's financial inclusion in India' என்கிற தலைப்பில் மைக்ரோ சேவ் கன்சல்டிங் (Microsave Consulting) என்கிற அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிகையில் அப்படி என்ன சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள் என ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
77 சதவிகித பெண்கள்
2014-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் சுமார் 43 சதவிகித பெண்களுக்கு தான் சொந்தமாக வங்கிக் கணக்கு இருந்ததாம். ஆனால் 2017-ம் ஆண்டு வாக்கில் சுமார் 77 சதவிகித இந்திய பெண்களுக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு இருக்கிறதாம். அதோடு Financial Inclusion விகிதத்திலும் இந்தியா முன்னேறி இருக்கிறதாம்.
ஆண் பெண் விகிதம்
Financial Inclusion என்றால், இந்தியாவின் நிதி சேவைகளில் அனைவரும் இணைக்கப்பட வேண்டும் என்பது தான். பிரதமரின் ஜன் தன் திட்டத்தால், இந்த Financial Inclusion-ல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் இருந்த இடைவெளியை சுமாராக 14 சதவிகித புள்ளிகள் குறைத்து இருக்கிறதாம்.
வங்க தேசம் & பாகிஸ்தான்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்களுக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு இருப்பது அதிகமாக இருக்கிறதாம். வங்கதேசத்தில் 36 % மற்றும் பாகிஸ்தானில் 7 % பெண்களுக்கு மட்டுமே சொந்தமாக வங்கிக் கனக்கி இருக்கிறதாம்.
செயல்படாத கணக்குகள்
அதே நேரத்தில், இந்தியாவில், பிரதான் மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட சில பல கணக்குகள் செயல்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறது மைக்ரோ சேவ் கன்சல்டிங் நிறுவனத்தின் அறிக்கை. வங்கிக் கணக்கை வைத்திருப்பது எல்லாம் ஓகே, இப்போது அந்த வங்கிக் கணக்கில் பணம் புழங்க வேண்டுமே. அதற்கும் அரசு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications