இந்தியாவில் தற்போது வேகமெடுத்துள்ள நிலையிலும் கூட, பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
எனினும் இன்று தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 24,586 ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 197 ஆக அதிகரித்துள்ளது. இதே இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2,07,615 பேருக்கு உள்ள நிலையில், பலி எண்ணிக்கையானது 5,815 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் லாக்டவுன் காலத்தில் இருந்து தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. அதிலும் இந்தியாவில் சிறந்த ஐந்து மாநிலங்களை பட்டியலிட்டுள்ளது ஒர் ஆய்வு.
எலாரா செக்யூரிட்டீஸ் இன்க் நடத்திய இந்த ஆய்வில், கேரளா, பஞ்சாப், தமிழகம், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் சென்று கொண்டு உள்ளனவாம். இந்த ஆய்வுக்காக மின்சார உபயோகம், போக்குவரத்து இயக்கம், மொத்த விற்பனை மையத்திற்கு விவசாய பொருட்களின் வருகை மற்றும் கூகுள் தரவு உள்ளிட்ட தரவுகள் எடுத்துக் கொள்ளபட்டதாக எலாரா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கரீமா கபூர் தெரிவித்துள்ளார்.
இதே மற்ற முக்கிய தொழில் துறை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில், பரவி வரும் கொரோனா பெருந்தொற்று நோயால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாதாரண நடவடிக்கைகளை தொடங்குவதே இந்திய பொருளாதாரத்திற்கு சிறந்த தூண்டுதலாக இருக்கிறது என்றும் கபூர் கூறியுள்ளார்.
இதே பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாய செயல்பாடுகளில் தேவை அதிகரித்துள்ள நிலையில், மின்சார உபயோகம் அதிகரித்துள்ளது. இதே தலைநகர் டெல்லியிலும் மின்சார தேவை அதிகரித்துள்ளது. ஆக இதுவும் தேவை அதிகரிப்பையே சுட்டிக் காட்டுகிறது.
மேலும் நுகர்வோர் தங்கள் நுகர்வு முறையை புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு ஏதேனும் மாற்றியிருக்கிறார்களா? என்று கூகுளின் தேடல் போக்குகளை கபூர் ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த பகுப்பாய்வில் சலூன் சேவைகள், ஏர் கண்டிசனர்கள், விமான போக்குவரத்து, பைக்குகள், வாக்யூம் க்ளினர்கள், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை லாக்டவுன் காலத்தில் தேடியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதே லாக்டவுன் முதன் முறையாக செய்யப்பட்ட போது, ஹேர் ஆயில், சோப்புகள், லிக்யூட்கள், லேப்டாப், மொபைல் போன்கள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், இயர் போன்கள் உள்ளிட்டவற்றையும் ஆர்டர் செய்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications