கேரளாவில் பிறந்த ரவி பிள்ளை வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள மிகமுக்கியமான தொழிலதிபர் ஆவார்.
கேரளா அரசுக்கும், கேரள மக்களுக்கும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் உதவிய ரவி பிள்ளை தற்போது கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியியல் உதவிகளைச் செய்வதற்காக ரவி பிள்ளை துவங்கிய ஆர்பி பவுண்டேஷன் வாயிலாகச் சுமார் 15 கோடி ரூபாய் அளவிலான தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்..
கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை
பல மலையாளிகள், குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் மலையாளிகள் கொரோனா தொற்று மூலம் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவரை இழக்கும் பட்சத்தில் அக்குடும்பமும், குழந்தைகளும் உதவிகள் இல்லாமல் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.
ரவி பிள்ளை-யின் ஆர்பி குரூப்
இப்படிக் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட, பல நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள பல குடும்பங்களைத் தன்னையும், தன் நிறுவனத்தையும் உதவிகளுக்காகத் தொடர்ந்து அணுகி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவுவதற்காகவே 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என ஆர்பி குரூப் தலைவர் ரவி பிள்ளை தனது பஹ்ரைன் அலுவலகத்தில் இருந்து தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் மலையாளிகள்
கொரோனா தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் இருந்து பல உதவிகளைச் செய்து வரும் ரவி பிள்ளையின் ஆர்பி குரூப் உலகின் பல பகுதியில் இருக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செய்யத் தேவையான விமான டிக்கெட் பெறுவதற்கான தொகைக்கு நிதியுதவி செய்துள்ளது.
கோவிட் சிகிச்சை அறை
கேரளா அரசுடன் இணைந்து சாவரா பகுதியில் 250 படுக்கை கொண்ட கோவிட் சிகிச்சைப் பிரிவை சங்கரமங்கலம் பள்ளியில் உருவாக்கியுள்ளது ரவி பிள்ளையில் ஆர்பி குரூப்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன்
மேலும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 15 கோடி ரூபாயில் 5 கோடி ரூபாய் வெளிநாட்டில் இருக்கும் மலையாளிகளுக்கு உதவும் வகையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை NORKA திட்டத்தின் கீழ் அரசு பயன்படுத்த உள்ளது.
10 கோடி ரூபாய் நிதியுதவி
மீதமுள்ள 10 கோடி ரூபாய் தொகையைக் கொரோனாவால் பெரும் நிதிநெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளவர்களுக்கும், கொரோனா சிகிச்சை பெற போதிய நிதி ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கும், நிதி பாதிப்பில் இருக்கும் விதவைகளுக்கும், பெண் பிள்ளைகளின் திருமணம் செய்ய முடியாதவர்களும் உதவிட முடிவு செய்துள்ளது கேரள தொழிலதிபர் ரவி பிள்ளையின் ஆர்பி குரூப்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications