கேரளாவில் பிறந்த ரவி பிள்ளை வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள மிகமுக்கியமான தொழிலதிபர் ஆவார்.
கேரளா அரசுக்கும், கேரள மக்களுக்கும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் உதவிய ரவி பிள்ளை தற்போது கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியியல் உதவிகளைச் செய்வதற்காக ரவி பிள்ளை துவங்கிய ஆர்பி பவுண்டேஷன் வாயிலாகச் சுமார் 15 கோடி ரூபாய் அளவிலான தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்..
கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை
பல மலையாளிகள், குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் மலையாளிகள் கொரோனா தொற்று மூலம் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவரை இழக்கும் பட்சத்தில் அக்குடும்பமும், குழந்தைகளும் உதவிகள் இல்லாமல் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.
ரவி பிள்ளை-யின் ஆர்பி குரூப்
இப்படிக் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட, பல நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள பல குடும்பங்களைத் தன்னையும், தன் நிறுவனத்தையும் உதவிகளுக்காகத் தொடர்ந்து அணுகி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவுவதற்காகவே 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என ஆர்பி குரூப் தலைவர் ரவி பிள்ளை தனது பஹ்ரைன் அலுவலகத்தில் இருந்து தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் மலையாளிகள்
கொரோனா தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் இருந்து பல உதவிகளைச் செய்து வரும் ரவி பிள்ளையின் ஆர்பி குரூப் உலகின் பல பகுதியில் இருக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செய்யத் தேவையான விமான டிக்கெட் பெறுவதற்கான தொகைக்கு நிதியுதவி செய்துள்ளது.
கோவிட் சிகிச்சை அறை
கேரளா அரசுடன் இணைந்து சாவரா பகுதியில் 250 படுக்கை கொண்ட கோவிட் சிகிச்சைப் பிரிவை சங்கரமங்கலம் பள்ளியில் உருவாக்கியுள்ளது ரவி பிள்ளையில் ஆர்பி குரூப்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன்
மேலும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 15 கோடி ரூபாயில் 5 கோடி ரூபாய் வெளிநாட்டில் இருக்கும் மலையாளிகளுக்கு உதவும் வகையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை NORKA திட்டத்தின் கீழ் அரசு பயன்படுத்த உள்ளது.
10 கோடி ரூபாய் நிதியுதவி
மீதமுள்ள 10 கோடி ரூபாய் தொகையைக் கொரோனாவால் பெரும் நிதிநெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளவர்களுக்கும், கொரோனா சிகிச்சை பெற போதிய நிதி ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கும், நிதி பாதிப்பில் இருக்கும் விதவைகளுக்கும், பெண் பிள்ளைகளின் திருமணம் செய்ய முடியாதவர்களும் உதவிட முடிவு செய்துள்ளது கேரள தொழிலதிபர் ரவி பிள்ளையின் ஆர்பி குரூப்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications