திருவனந்தபுரம்: தமிழகத்தில் இருந்து வெங்காயம், தக்காளி உட்பட உணவு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய கேரளா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.
வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்க மேல் விற்கிறது. சின்ன வெங்காயம் 150 ரூபாய் வரை விற்கிறது
மழை அதிகரிப்பால் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது.
நேரடி கொள்முதல்
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வெங்காயம், தக்காளி உட்பட உணவு பொருட்களை நேரடியாக கேரள அரசே கொள்முதல் செய்ய விரும்புவதாக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.
கேரள அரசு
அந்த கடிதத்தில் அண்மைக்காலமாக வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆகவே விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் நலனை காக்கவும் கொள்முதல் மூலமாக கேரள அரசு இவ்விஷயத்தில் தீர்வு காண முடிவு செய்துள்ளது. கேரளாவை பொறுத்த வரை, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விநியோகத்தில் மற்ற மாநிலங்களையே அதிகம் சார்ந்து இருக்கிறது.
தமிழகத்தில் கொள்முதல்
மத்திய அரசின் திட்டத்தின் படி தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களை மற்ற மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள முடியும். இதன்படி, தமிழக விவசாயிகள் மற்றும் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் கேரளாவின் விநியோக அமைப்புகள் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வேண்டுகோள்
எனவே, தமிழகத்தில் இருந்து உணவு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார். இதே போல, மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள அரசு நம்பிக்கை
முதல்கட்டமாக கேரள அரசின் சப்ளைக்கோ 1,000 டன் வெங்காயம் கொள்முதல் செய்ய உள்ளது. , நுகர்வோர் மற்றும் ஹார்டிகாப் முறையே 300 மற்றும் 500 டன் வெங்காயம் கொள்முதல் செய்ய உள்ளன.. நவம்பர் 3 முதல் விநியோகம் தொடங்கலாம் என்று கேரள அரசாங்கம் நம்புகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications