கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வோடபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியிருந்தார்.
இதுவே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது குமார் மங்கலம் பிர்லா வோடபோன் ஐடியாவின் நிர்வாகமற்ற இயக்குனர் குழு மற்றும் நிர்வாகமற்ற தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இது குறித்து பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில், பிர்லாவின் பதவி விலக,ல் கோரிக்கையை நிர்வாக குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிர்லாவுக்கு பதில் இனி இவர்?
ஹிமான்ஷூ கபானியா தற்போது இந்த நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குனராக உள்ளார். ஆக பிர்லாவுக்கு பதிலாக நிர்வாகமற்ற தலைவர் பதவியும் வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட கபானியா, தொலைத் தொடர்பு துறையில் 25 வருடம் அனுபவமுள்ளவர் ஆகும்.
சுஷில் அகர்வால் இணைப்பு
அதோடு ஆதித்யா பிர்லா குழுமத்தின் பரிந்துரைக்கப்பட்ட சுஷில் அகர்வால் ஆகஸ்ட் 4 முதல் கூடுதல் இயக்குனராக நியக்கமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெருத்த கடன் சுமையில் உள்ள இந்த தொலைத் தொடர்பு நிறுவனம் அதிகரித்து வரும் நஷ்டம் மற்றும் ஏஜிஆர் நிலுவை போன்ற பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றது.
பெருத்த கடன் சிக்கல்
கடந்த ஜூன் மாதத்தில் கேபினட் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் ராஜீவ் கபாவுக்கு எழுதிய கடித்தத்தில், வோடபோன் நிறுவனத்தின் மொத்த நிலுவையில் 7854.37 கோடி ரூபாயினை மட்டும் செலுத்தியுள்ளதாகவும், மீதம் நிலுவையில் 50,399.63 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறியிருந்தார்.
முதலீட்டாளர்கள் தயாராக இல்லை
மேலும் வோடபோன் ஐடியா பெருத்த சிக்கலுக்கு மத்தியில் உள்ளதால், முதலீட்டாளர்கள் கடனுடன் உள்ள இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இல்லை. இதனால் வோடபோன் நிறுவனம் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆக அரசின் உதவி இல்லாவிட்டால் நிறுவனம் என்ன நிலைக்கு செல்லும் என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
பங்குகளை ஒப்படைக்க தயார்?
வோடபோனில் 27 கோடி இந்தியர்களை இணைக்கிறது. ஆக அதனை கருத்தில் கொண்டு, எனது பங்குகளை நாண் அரசிடமோ/ அரசு சார்ந் நிறுவனங்களிடமோ, அல்லது நிறுவனத்தினை எடுத்து நடத்த தயாராஜ்க உள்ள அரசு கருத்தில் கொள்ளக் கூடிய எந்த நிறுவனத்திலும் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
அடுத்து என்ன செய்யபோகிறதோ?
இப்படி தகவல் வெளியாக சில தினங்களிலேயே இப்படி ஒரு செய்தி வெளியாகியிருப்பது, வோடபோன் நிறுவனத்தின் அடுத்தகட்ட நிலை எப்படியிருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகவே எழுந்துள்ளது. ஏற்கனவே கடன் பிரச்சனை, ஏஜிஆர் நிலுவைக்கு மத்தியில் உள்ள நிறுவனம் அடுத்து என்ன செய்ய போகின்றதோ தெரியவில்லை.
பெரும் கேள்விக்குறி
மேலும் நிறுவனத்தின் பங்குகளை அரசு வாங்கி கொள்ள கூறியதாக பிர்லா கூறியிருந்தாலும், இது குறித்து இரு தரப்பிலும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த வேண்டுகோளுக்கு அரசின் நிலைப்பாடு என்ன என்பதும் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆக மொத்தத்தில் வோடபோனின் எதிர்காலம் என்பது இனி பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இன்றைய பங்கு விலை
ஏற்கனவே அதல பாதாளத்தில் உள்ள வோடபோன் பங்கு விலையானது, பற்பல மோசமான காரணிகளால், NSEல் இன்று மட்டும் 18.92% குறைந்தும் 6 ரூபாயாக சரிந்து முடிவடைந்துள்ளது.
இதே BSEல் 18.51% குறைந்து 6.03 ரூபாயாகவும் வர்த்ர்தகமாகி முடிவடைந்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனத்தின் முகமதிப்பானது 10 ரூபாயாகும்.