இந்தியாவில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கு அதிகளவிலான சலுகையை அறிவித்து வருகிறது.
உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது மத்திய அரசின் திட்டம். வேலைவாய்ப்பு உருவாக்குவதன் மூலம் நாட்டின் வர்த்தகச் சந்தையும் பொருளாதாரம் அதிகரிக்கும் என்பதே இதன் பின் இருக்கும் அடிப்படை காரணம்
இந்த வகையில் இந்தியாவின் 100 வருடப் பழமையான ரயில்வே போக்குவரத்தை தலைகீழாக மாற்றப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியை எல்&டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
7000 கோடி ரூபாய்
மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு பகுதியின் கட்டுமான திட்டத்தை எல்&டி நிறுவனம் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் 7000 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எல்&டி நிறுவனம் வியாழக்கிழமை வெள்யிட்டுள்ளது.
87.56 கிலோமீட்டர்
நேஷனல் ஹைய் ஸ்பீடு ரெயில் கார்ப் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இத்திட்டத்தின் சரியான மதிப்பீட்டை எல்&டி நிறுவனம் தெரிவிக்காத நிலையில் தோராயக் கணிப்பில் அறிவித்துள்ளது.
மும்பை - அகமதாபாத் வழித்தட (MAHSR) திட்டத்தின் ஒரு பகுதியான 87.56 கிலோமீட்டர் ரயில்வே பாதையை அமைக்கும் திட்டத்தைத் தான் தற்போது எல்&டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கட்டுமானம்
இந்த 87.56 கிலோமீட்டர் ரயில்வே பாதையில் ஒரு ரயில்வே ஸ்டேஷன், ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்படும் பாலம், maintenance depot, மலைக்குள் நுழைந்து செல்லும் ducts வழிப்பாதை மற்றும் இதர கட்டுமானங்களும் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை - அகமதாபாத் வழித்தட திட்டம்
சுமார் 508 கிலோமீட்டர் நீண்ட வழித்தட திட்டமான மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் மகாராஷ்டிரா, தாரா, நகர் ஹவேலி, குஜராத் பகுதிகளைச் சுமார் 12 ரயில்வே நிலையங்கள் மூலம் இணைக்கப்படுகிறது
இந்தத் திட்டம் முடிவடையும் போது இத்தடத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில் மணிக்கு 302 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும், மும்பையில் இருந்து அகமதாபாத்-ஐ வெறும் 2 மணிநேரத்தில் சென்றடைய முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications