நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி (LIC)யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்காக செபி அனுமதி கொடுத்துள்ளது.
எனினும் தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் இந்த பங்கு விற்பனையானது தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
எல்ஐசி தனது பங்கு வெளியீட்டுக்கான வரைவினை கடந்த மாதமே செபியிடம் சமர்ப்பித்திருந்த நிலையில், தற்போது தான் அனுமகி கிடைத்துள்ளது. எல்ஐசி-யில் மத்திய அரசின் வசம் இருக்கும் பங்குகள் 5% அல்லது 31.62,49,885 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
22 நாட்களுக்குள் அனுமதி
செபிக்கு அளிக்கப்பட்ட 22 நாட்களுக்குள் எல்ஐசி-க்கு பங்கு வெளியீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி-யின் இந்த பங்கு வெளியீட்டில் 50% தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எனவும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 15%மும், 35% சில்லறை விற்பனையாளர்களுக்கும் விற்பனை செய்யப்படும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எப்போது வெளியீடு?
தற்போது நிலவி வரும் நெருக்கடியான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த மெகா பங்கு வெளியீடானது அடுத்த நிதியாண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபியின் இந்த ஒப்புதல்கள் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். எல்ஐசி இன்சூரன்ஸ் சந்தையில் கணிசமான பங்குகளை கொண்ட ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமாக இருந்து வருகின்றது.
நிதி திரட்டல்
இதன் மூலம் 65,000 கோடி ரூபாய் முதல் 85,000 கோடி ரூபாய் வரையில் நிதியினை திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செபி பங்கு வெளியீட்டுக்கு 650 பக்க விவர அறிக்கையை செபி பரிசீலித்து அனுமதி வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. எனினும் இந்த அறிவிப்பில் முக மதிப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தாமதமாகலாம்
அரசின் நிதி பற்றாக்குறையை எட்ட எல்ஐசி-யின் இந்த பங்கு வெளியீடானது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எனினும் தற்போது சந்தையில் நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியில் இந்த பங்கு வெளியீடானது தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிசிதாரர்களுக்கு சலுகையா?
இந்த பங்கு வெளியீட்டில் பாலிசிதாரர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. நேரிடையாக சில்லறை முதலீட்டாளராக பங்கேற்காமல், பாலிசிதாரராக பங்கேற்கும்போது, எளிதில் ஐபிஓ-வில் பங்கு கிடைக்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரியவரும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications