இந்தியாவின் அரசுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி கடந்த மே மாதம் ஐபிஓ வெளியிட்டது என்பது தெரிந்ததே.
இந்த ஐபிஓ வெளியான முதல் நாளில் இருந்தே மோசமாக செயல்பட்டு வருகிறது என்பதும் அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் எல்ஐசி ஐபிஓ தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது என்பதும் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் அதன் மதிப்பு ரூ. 589.30 என்ற நிலையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்.ஐ.சி ஐபிஓ
கடந்த மே மாதம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ ஒவ்வொரு நாளும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து நஷ்டத்தை கொடுத்து வருகிறது.
வரலாற்று சாதனை
கடந்த 4 மாதங்களில் எல்ஐசியின் ஐபிஓ தொடர்ந்து குறைந்து புதிய வரலாற்று சாதனை அளவுகளை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்றும் எல்.ஐ.சி ஐபிஓ வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் NSE மற்றும் BSE இரண்டிலும் எல்.ஐ.சி ஓபிஓ சரிந்துள்ளது. நேற்று NSE-யில் ரூ.588.95 ஆகவும், BSE-யில் ரூ.589.30 ஆகவும் முடிவடைந்தது.
32% சரிவு
எல்.ஐ.சி ஐபிஓ பட்டியலிடப்பட்ட நாளிலிருந்து இன்று வரை கணக்கில் இடப்பட்டால் எல்ஐசியின் பங்கு விலை பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இரண்டிலும் 32% க்கும் அதிகமாக சரிந்துள்ளது.
முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, தனது ஐபிஓவை ஒரு பங்குப் பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 என நிர்ணயித்துள்ளது. ஆனால் இன்று அந்த ஐபிஓவின் பங்கு 32 சதவிகிதம் சரிந்து ரூ.588.95 என வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications