முன்னேறிய நாடுகளுடன், இந்தியாவை ஒப்பிடும் போது, லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவே. சொல்லப் போனால் மெல்ல இந்தியாவில் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையை நெறிமுறை செய்யும் அமைப்பு ஐ ஆர் டி ஏ ஐ என்றழைக்கப்படும் IRDAI - Insurance Regulatory and Development Authority of India அமைப்பு தான்.

கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி தொடர்பக வந்திருக்கும் புகார்களின் எண்ண்ணிக்கை சுமாராக 6 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக, ஐ ஆர் டி ஏ ஐ அமைப்பே தன் ஆண்டு அறிக்கையில் சொல்லி இருக்கிறது.
வந்து இருக்கும் மொத்த லைஃப் இன்சூரன்ஸ் புகாரில் 1,02,127 புகார்கள் அரசின் லைஃப் இன்சூரன்ஸ் கார்பப்ரேஷனுக்கு எதிராக வந்திருக்கின்றனவாம். மீதமுள்ள 61,137 லைஃப் இன்சூரன்ஸ் புகார்கள் தான் மற்ற தனியார் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு எதிராக வந்திருக்கின்றனவாம்.
அப்படி என்ன மாதிரியான புகார்கள் வந்திருக்கிறது எனப் பார்த்தால், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலம் தங்களுக்கு (பாலிசி எடுத்தவர்களுக்கு) எவ்வளவு வருமானம் வரும், ஒரு பாலிசியை எடுப்பதால் தங்களுக்கு என்ன லாபம் என்கிற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் பாலிசிக்களை வாங்கியது போன்ற புகார்கள் வந்து இருக்கிறதாம். அதொடு வழக்கம் போல தவறான விவரங்களைச் சொல்லி இன்சூரன்ஸ் பாலிசியை தலையில் கட்டிவிடுவது மற்றும் எத்தனை ஆண்டுகளுக்கு அல்லது மாதங்களுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் பாலிசிக்களை வாங்கியது என ஐ ஆர் டி ஏ ஐ அமைப்பு தன் ஆண்டு அறிக்கையில் சொல்லி இருக்கிறது.
ஒரு பக்கம் லைஃப் இன்சூரன்ஸ் தொடர்பாக புகார்கள் அதிகரித்தாலும், மறு பக்கம் லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறதாம்.
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், லைஃப் இன்சூரன்ஸுக்கு, முதலாம் ஆண்டு ப்ரீமியம் வசூல் மட்டும் 11.39 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் கண்ட 10.75 % வளர்ச்சியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications