இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் மதுபான விற்பனை அதிகரித்து வரும் நிலையில் 2020ஆம் நிதியாண்டின் முதல் 6 மாத காலகட்டத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட மதுபான விற்பனை தடை, மதுபானம் மீது போடப்பட்ட கொரோனா வரி, லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக மதுபான விற்பனை சுமார் 29 சதவீதம் சரிந்துள்ளது.
இந்திய மதுபான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாத காலத்தில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 3 முக்கியக் காரணத்தால் நாட்டில் மதுபான விற்பனை சந்தித்துள்ளது.
அதிலும் 4 முக்கிய மாநிலங்களில் மதுபானம் மீது விதிக்கப்பட்ட அதிகப்படியான அதிகப்படியான வரி காரணமாகப் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளதாக இந்திய மதுபான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த 4 முக்கிய மாவட்டத்தில் தமிழ்நாடும் உள்ளதா..? வாங்கப் பார்ப்போம்..!
அதிகப்படியான கட்டுப்பாடுகள்
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த லாக்டவுன் காரணமாக நாட்டின் அனைத்து வர்த்தகம் மற்றும் சேவைகள் முடப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் மதுபானம் வாங்க அருந்த முடியாத சோகத்திற்குத் தள்ளப்பட்டனர்.
இந்தப் பிரச்சனைக்கு முடிவுகட்ட மத்திய மாநில அரசுகள் ஆலோசனை செய்து முதற்கட்ட லாக்டவுன் தளர்வில் மதுபான கடைகளில் பல கட்டுப்பாடுகள் உடன் மதுபான விற்பனை துவங்கப்பட்டது.
கொரோனா வரி
கட்டுப்பாடுகள் உடன் மதுபான விற்பனையைத் துவங்கினாலும் பல மாநிலங்கள் மதுபானம் மீது கூடுதலாக கொரோனா வரி விதித்து அரசுக்கு வருமானம் ஈட்டவும், மக்கள் மத்தியில் இந்த லாக்டவுன் காலத்தில் மதுபானம் விற்பனை செய்வதும் குறைக்க வரி விதிக்கப்பட்டது.
இதனால் மதுபானத்தின் விலையும் அதிகமானது.
விற்பனை பாதிப்பு
பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரியின் காரணமாக இந்தியாவில் மதுபான விற்பனை 5 முதல் 10 சதவீதம் இக்காலகட்டத்தில் குறைந்துள்ளது என மதுபான கூட்டமைப்பின் தலைவர் வினோத் கிரி தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான பாதிப்பு
2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மதுபான விற்பனை சுமார் 49 சதவீதம் சரிந்தது. அதன் பின்பு பல மாநிலங்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யப்பட்டது.
அதேபோல் பல வாரங்களுக்குப் பின் மதுபானம் விற்பனை துவங்கப்பட்டதால் விற்பனை அளவு அதிகரித்தது. ஆனாலும் கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 2வது காலாண்டிலும் 9 சதவீதம் சரிவு தான்.
5 மாநிலங்கள்
மதுபான விற்பனை தடை, மதுபானம் மீது போடப்பட்ட கொரோனா வரி, லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக ஆந்திரா (-51%), சத்தீஸ்கர் (-40%), ஜம்மு & காஷ்மீர் (-39%), மேற்கு வங்கம் (-22%) மற்றும் ராஜஸ்தான் (-20%) ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான விற்பனை சரிவு ஏற்பட்டது..
மதுபான விற்பனை சரிவு ஏற்பட்ட மாநிலங்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் கூட வரவில்லை என்பதால் தமிழ்நாட்டு மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.