தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களீன் விலை உயர்வால், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதனால் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டியின் விலையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக அதிகரிக்கபோவதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மூலதன பொருட்கள் விலை
ஏற்கனவே எரிபொருளுக்கான மூலதன பொருட்களின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரெட் பாஸ்பரஸின் விலை 425 ரூபாயில் இருந்து, 810 ரூபாயாக அதிகரித்துள்ளது. மெழுகு விலையானது 58 ரூபாயில் இருந்து, 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வெளியில் இருக்கும் பெட்டியின் விலை 32 ரூபாயில் இருந்து, 58 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
14 வருடத்தில் இல்லாத அளவு ஏற்றம்
தொடர்ந்து அதிகரித்து வரும் மூலதன பொருட்களின் விலைக்கு மத்தியில் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதற்கியிடையில் இது தவிர பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவும் உற்பத்தியாளர்களின் செலவினை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தீப்பெட்டி விலையை அதிகரிக்க உற்பத்தியாளார்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உற்பத்தி
தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி வேலூர் மற்றும் தர்மபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இது உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவும்.
விலைவாசி அதிகரிப்பு
ஏற்கனவே சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் பொருட்கள் விலை என அனைத்தும் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயம் விலையானது விண்ணை தொடும் அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இதுவும் சாமனியர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்க தொடங்கியுள்ளது.
சுமை குறையும்
இது இனி மக்கள் வழக்கத்தினை விட கூடுதலாக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனினும் அனைத்து விலைவாசியும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தீப்பெட்டி உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் நஷ்டம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த விலை அதிகரிப்பானது மேற்கொண்டு உற்பத்தியாளர்களின் சுமையும், தொழிலாளர்களின் சுமையும் குறைய வாய்ப்பாக அமையலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications