பாஸ்ட் புட் உலகில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் மெக்டொனால்டு இந்தியாவிலும் பல நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் பர்கர்களுக்கு இந்தியாவில் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் மெக்டொனால்டு கடைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் மேற்கு மற்றும் தென் இந்தியாவில் மெக்டொனால்டு கடைகளை நடத்தும் வெஸ்ட்லைப் லெவலப்மென்ட் நிறுவனம் கொரோனா காரணமாக 6 மாதங்களாக மூடப்பட்ட மெக்டொனால்டு கடைகளை மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது திறந்துள்ளது.
வெஸ்ட்லைப் லெவலப்மென்ட் நிறுவனம் மெக்டொனால்டு கடைகளைத் திறப்பதற்கு முன்பே ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உயர்தரச் சுத்தம் மற்றும் பராமரிப்பையும் கடைப்பிடிப்பதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
Golden Guarantee பிளாட்பார்ம்
மகாராஷ்டிராவில் மெக்டொனால்டு கடைகளைத் திறக்கும் வெஸ்ட்லைப் லெவலப்மென்ட் நிறுவனம் Golden Guarantee பிளாட்பார்ம் என்ற உயர் தர பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுவையான உணவு பழக்கத்தைக் கொண்டு மக்களுக்கு Dine in சேவைகளை வழங்குகிறது.
வெஸ்ட்லைப் லெவலப்மென்ட் நிறுவனம் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்கு மற்றும் தெற்கு பிராந்திய கடைகளில் Golden Guarantee பிளாட்பார்ம் கீழ் சுமார் 42 உயர் தரப் பாதுகாப்பு, சுகாதாரம் நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
42 சுகாதார முறை
42 உயர் தர பாதுகாப்பு, சுகாதாரம் நடைமுறைகளைக் கொண்ட இந்த Golden Guarantee பிளாட்பார்ம் மூலம் மெக்டொனால்டு ஊழியர்கள் உணவுகளைத் திறந்த கைகளில் தொடாதவாறு சமைத்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க உள்ளது.
இந்த 42 விதிமுறைகளில் சமுக இடைவெளி முதல் பாதுகாப்புக் கவசங்கள் வரையில் அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களும் அடங்கும்.
சவுரப் கார்லா
6 மாதங்களுக்குப் பின் கடைகள் திறக்கப்படும் நிலையில் மக்களுக்கு உயர்தரப் பாதுகாப்புடன் அரசு விதிகள் அனைத்தையும் கடைப்பிடிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு உயர் தர அனுபவத்தை எப்போது போலவே கொடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என் மெக்டொனால்டு இந்தியா நிறுவனத்தின் சிஓஓ சவுரப் கார்லா தெரிவித்துள்ளார்.
பேமெண்ட்
அனைத்திற்கும் மேலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர் மற்றும் பேமெண்ட் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பெற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பேமெண்டுக்காக யூபிஐ மற்றும் டேப் அண்ட் பே முறையும், ஆர்டர் செய்வதற்காக வாட்ஸ்அப் மூலம் செய்யவும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது எனச் சவுரப் கார்லா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications