ஆடம்பரத்திலும், செல்வத்திலும் திளைத்திருக்கும் வளைகுடா நாடுகள் இன்னும் 15 வருடத்தில் ஏழை நாடாக மாறிவிடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? நிச்சயம் யாராலும் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை எனச் சர்வதேச நாணய அமைப்பு தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் 2 டிரில்லியன் சாம்ராஜ்ஜியம் இன்னும் 15 வருடத்தில் பணமும் வர்த்தகமும் இல்லாமல் தவிக்கப்போகிறது எனச் சர்வதேச நாணய அமைப்பு எனப்படும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
மாற்று எரிபொருள்
உலகளவில் கச்சா எண்ணெய்-யின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு உற்பத்தி அளவுகள் அதிகரித்துள்ளது. அதேபோல் மறுபுறம் கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கும் வகையில் அனைத்து நாடுகளும் மாற்றும் எரிபொருள் பயன்படுத்தும் தளங்களையும் உருவாக்கி வருகிறது.
2 பிரச்சனை
இதனால் வளைகுடா நாடுகளுக்கு இரண்டு மாறுபட்ட பிரச்சனைகள் உருவாகும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வளங்கள் இல்லாமல் போகலாம் அல்லது உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்குத் தேவை இல்லாமல் போகலாம். இது இரண்டுமே வளைகுடா நாடுகளில் கஜானாவிற்குப் பிரச்சனை தான்.
15 வருடக் கணக்கு
இப்படியிருக்கும் சூழ்நிலையில் வளைகுடா நாடுகள் இன்னமும் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி தனது பொருளாதாரத்தை நகர்த்தினால் 2034ஆம் ஆண்டுக்குள் கையில் இருக்கும் மொத்த பணம் காலியாகிவிடும், அடுத்த 10 வருடத்திற்குள் எண்ணெய் வளம் அல்லாத மற்ற சொத்து மற்றும் முதலீடுகளும் மறைந்து விடும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
மாற்று வழி
வளைகுடா நாடுகள் புதிய வர்த்தகம், புதிய முதலீடுகள், புதிய திட்டம் என நீண்ட கால அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கி பொருளாதாரத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் எண்ணெய் தேவையில் பிரச்சனை வந்தாலும் மாற்று நிதி ஈட்டும் வழியைப் பெற முடியும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
வாசகர்கள் ஆகிய நீங்கள் என்ன சொல்றீங்க 15 வருடங்களுக்குப் பின் வளைகுடா நாடுகள் வீழ்ந்துவிடுமா..?
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications