அதீத கடனில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு டாடா குழுமத்திற்கு வெற்றிகரமாக 18,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வெற்றி அடைந்த நிலையில் அடுத்த பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளது மத்திய அரசு.
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதாவது மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பு சுமார் 13 விமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல் செய்ய வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
13 விமான நிலையம்
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பின் தலைவரான சஞ்சீவ் குமார் கூறுகையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு 13 விமான நிலையத்தை PPP (public-private partnership) திட்டத்தின் கீழ் ஏலம் விட அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். மேலும் இந்த ஏலத்தை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் செய்ய முடிவு செய்துள்ளதாகச் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
பயணி - வருமானம்
மேலும் இந்த 13 விமான நிலையத்தின் ஏலத்தை ஒரு பயணிக்குக் கிடைக்கும் சராசரி வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்த உள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தலைவர் சஞ்சீவ் குமார் கூறியுள்ளார். இதே முறையின் கீழ் தான் நொய்டாவில் இருக்கும் ஜீவார் விமான நிலையம் ஏலம் விடப்பட்டது.
50 வருட குத்தகை
வழக்கம் போல் இந்த 13 விமான நிலையங்களை 50 வருடக் குத்தகை அடிப்படையில் தான் செயல்படுத்த உள்ளது. மேலும் தற்போது விற்பனை செய்யப்படும் 13 விமான நிலையத்தில் 6 பெரிய விமான நிலையங்கள் உடன் 7 சிறிய விமான நிலையங்களை இணைத்து ஏலம் விடப்பட உள்ளது.
தேசிய பணமாக்கல் திட்டம்
மத்திய அரசின் NMP திட்டம் அதாவது தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் 25 விமான நிலையங்களை அடுத்த 4 வருடத்தில் நீண்ட காலக் குத்தகை ஒப்பந்தம் மூலம் தனியார்மயமாக்கல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அதானி குழுமம்
இந்த 25 விமான நிலையத்தில் தற்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 13 விமான நிலையங்களும் உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே நாட்டின் 6 பெரிய விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு அளித்துள்ளது.
AAI நஷ்டம்
கொரோனா காலத்தில் விமானச் சேவைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 2021 நிதியாண்டில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சுமார் 1,962 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது, இதனால் இதைச் சமாளிக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் 1,500 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications