அதீத கடனில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு டாடா குழுமத்திற்கு வெற்றிகரமாக 18,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வெற்றி அடைந்த நிலையில் அடுத்த பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளது மத்திய அரசு.
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதாவது மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பு சுமார் 13 விமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல் செய்ய வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
13 விமான நிலையம்
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பின் தலைவரான சஞ்சீவ் குமார் கூறுகையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு 13 விமான நிலையத்தை PPP (public-private partnership) திட்டத்தின் கீழ் ஏலம் விட அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். மேலும் இந்த ஏலத்தை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் செய்ய முடிவு செய்துள்ளதாகச் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
பயணி - வருமானம்
மேலும் இந்த 13 விமான நிலையத்தின் ஏலத்தை ஒரு பயணிக்குக் கிடைக்கும் சராசரி வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்த உள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தலைவர் சஞ்சீவ் குமார் கூறியுள்ளார். இதே முறையின் கீழ் தான் நொய்டாவில் இருக்கும் ஜீவார் விமான நிலையம் ஏலம் விடப்பட்டது.
50 வருட குத்தகை
வழக்கம் போல் இந்த 13 விமான நிலையங்களை 50 வருடக் குத்தகை அடிப்படையில் தான் செயல்படுத்த உள்ளது. மேலும் தற்போது விற்பனை செய்யப்படும் 13 விமான நிலையத்தில் 6 பெரிய விமான நிலையங்கள் உடன் 7 சிறிய விமான நிலையங்களை இணைத்து ஏலம் விடப்பட உள்ளது.
தேசிய பணமாக்கல் திட்டம்
மத்திய அரசின் NMP திட்டம் அதாவது தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் 25 விமான நிலையங்களை அடுத்த 4 வருடத்தில் நீண்ட காலக் குத்தகை ஒப்பந்தம் மூலம் தனியார்மயமாக்கல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அதானி குழுமம்
இந்த 25 விமான நிலையத்தில் தற்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 13 விமான நிலையங்களும் உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே நாட்டின் 6 பெரிய விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு அளித்துள்ளது.
AAI நஷ்டம்
கொரோனா காலத்தில் விமானச் சேவைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 2021 நிதியாண்டில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சுமார் 1,962 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது, இதனால் இதைச் சமாளிக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் 1,500 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications