2014 ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், அதற்காக போதுமான நிதியை உருவாகவும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள், நிறுவனங்கள், பங்கு இருப்புகளை விற்பனை செய்தது மூலம் நிதி திரட்டி வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை பணமாக்கவும், அதை அதிகளவில் பயன்படுத்து தனியாருக்கு குத்தகைக்கு விடவும் மோடி தலைமையிலான அரசு NMP திட்டத்தை வகுத்துள்ளது.
இந்த நிலையில் மோடி தலைமையிலான அரசு 2 முறை ஆட்சியில் இருக்கும் நிலையில், இதுவரையில் அரசு சொத்துக்களின் விற்பனை மூலம் எவ்வளவு நிதி திரட்டியுள்ளது தெரியுமா..?
4.04 லட்சம் கோடி ரூபாய்
இந்த மாபெரும் நிதி திரட்டல் திட்டத்தில் சுமார் 59 முறை ஆஃபர் ஃபார் சேல் மூலம் மொத்தம் 1.07 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மத்திய அரசு நிதி திரட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ETF) மூலம் 10 தவணைகளில் பங்குகள் விற்பனை செய்தது மூலம் னது, மொத்தம் 98,949 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
10 நிறுவனங்கள் விற்பனை
ஏர் இந்தியா உட்பட 10 நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தது மூலம் கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசின் கஜானாவுக்கு சுமார் 69,412 கோடி ரூபாய் அளவிலான நிதி ஆதாரம் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து 45 கேஸ்களில் அரசின் பைபேக் திட்டம் மூலம் சுமார் 45,104 கோடி ரூபாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது.
ஐபிஓ
2014-15 ஆம் நிதியாண்டில் இருந்து சுமார் 17 மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களை பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 50,386 கோடி ரூபாய் அளவிலான நிதி ஆதாரம் கிடைத்துள்ளது.
லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா
ஐபிஓ மூலம் மத்திய அரசு ஈட்டிய முதலீட்டில் பெரும் பகுதி நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு சேவை அளிக்கும் நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா-வின் ஆரம்ப பொதுப் பங்கீடு (ஐபிஓ) மூலம் மட்டும் 20,516 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.
7.31 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு
மேலும் இந்த புதிய 17 நிறுவனங்களின் ஐபிஓ மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 7.31 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய பங்கு விற்பனை
இது தவிர, மத்திய அரசு பரதீப் பாஸ்பேட் லிமிடெட் நிறுவனத்தின் 472 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது. இதேபோல் ஐபிசிஎல் பங்குகளை 219 கோடி ரூபாய்க்கும், டாடா கம்யூனிகேஷன் நிறுவன பங்குகளை 8,847 கோடி ரூயாக்கும் விற்றுள்ளது.
சரியா..? தவறா..?
இப்படி மத்திய அரசு பல வகையில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்து 4.04 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியுள்ளது. இந்த நடைமுறையை மக்களாகிய நீங்கள் எப்படி பார்கிறீர்கள்..? இது சரியா..? தவறா..? மற்றக்காமல் கமெண்ட் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications