நாட்டில் இன்றும் மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனா காரணமாக, கடந்த ஆண்டே வணிகங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இரண்டாம் கட்ட பரவலும் மிக வேகமாக பரவி வருகின்றது.
இதற்கிடையில் தற்போது வரையிலும் கூட போதிய அளவு மீட்பு என்பது இல்லை. இதற்கிடையில் நிறுவனங்கள் தற்போதைக்கு நிரந்தர ஊழியர்களை பணியமர்த்துவதை குறைத்துள்ளன.
சில நிறுவனங்கள் தற்காலிக ஊழியர்களையே பணியமர்த்துகின்றன. நிரந்தர ஊழியர்கள் பணியமர்த்தல் என்பது நிறுத்திவிட்டு, பாதுகாப்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுகின்றன.
கமிஷன் அடிப்படையில் பணி
இது குறித்து மேன்பவர் நிறுவனத்தில் மூத்த இயக்குனர் அலோக் குமார், மூத்த தொழில் நுட்ப வல்லுனர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஆலோசகர்களாக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் கமிஷன் வடிவத்தில் இவர்கள் ஊழியமாக பெறுகின்றனர் என கூறுகிறார்.
தற்காலிக பணியமர்த்தல் அதிகரிக்கும்
இதற்கிடையி;ல் 2021ம் ஆண்டில் தற்காலிக பணியமர்த்தல் என்பது, கடந்த 2020ஐ விட இரு மடங்காக அதிகரிக்கும் என்று டீம்லீஷ் நிறுவனத்தின் வணிகத் தலைவரான தேவல் சிங் நம்புவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் இந்த மாற்றம் நிர்வாகங்கள் தங்கள் வணிக மாதிரிகளை மாற்றியமைப்பதன் விளைவாகும். நிறுவனங்கள் தற்போது வரையில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.
திறன் அடிப்படையில் பணி
குறிப்பாக செலவுகளை குறைக்க முயற்சித்து வருகின்றன. ஆக தற்காலிக வேலைக்கு அமர்த்தப்படுவதால், அவர்களின் திறமைகளின் ஒரு தொகுப்பை பெறுகிறார்கள். அவர்கள் சோதிக்கப்படலாம். பின்னர் தேவைப்பட்டால் நிரந்தர வேலைகளில் அமர்த்தப்படலாம் என சிங் கூறியுள்ளார். மொத்தத்தில் திறன் உள்ளவர்களாக இருந்தால், நிரந்தர ஊழியர்களாக மாற்றிக் கொள்கின்றன.
பிளெக்ஸிபிள் பணியாளர்
தற்போதைய நிலையில் நிறுவனங்கள் பிளெக்ஸிபிள் பணியாளர் மாதிரியை எதிர்பார்க்கின்றனர். இது சந்தையின் நிலையை பொறுத்து அவற்றை கூட்டியும் அல்லது குறைத்தும் அளவிட முடியும். கொரோனா வைரஸ் நிறுவனங்களை புதிய வணிக மாதிரிகளை கொண்டு வர மீண்டும் கட்டாயப்படுத்துகிறது. இது நிறுவனங்களை தற்காலிக பணியாளர்களை கொண்டு பரிசோதனை செய்யத் தூண்டுகிறது.
இது தான் நல்லது?
நிரந்தர ஊழியர்களை கொண்ட நிறுவனத்தை, குறுகிய காலத்திற்கு ஊழியர்களை பணியமர்த்துவது பாதுகாப்பானது, புத்திசாலிதனமானது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் தற்போது பல பார்மேட்டுகள் உருவாகின்றன. இதனால் நிரந்தர ஊழியர்கள் அணியை ஓவர்லோட் செய்யாமல் இருப்பது நல்லது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். .
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications