வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி என வருமான வரித்துறை அலுவலகம் அறிவித்திருந்த நிலையில் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 44 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நேற்றுடன் வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இதுவரை எத்தனை பேர் வருமான வரி தாக்கல் செய்து உள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
2022-23 வருமானவரி தாக்கல்
2022-23ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதியான நேற்று மாலை 6 மணி வரை இந்தியா முழுவதும் மொத்தம் 5.54 கோடி வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனாலும் வருமானவரித்துறை கால அவகாசத்தை நீட்டிக்கவில்லை.
5.54 கோடி வருமான வரி தாக்கல்
நேற்று மாலை மாலை 5 மணி முதல் 6 மணி வரை 5 லட்சத்துக்கும் அதிகமான ரிட்டர்ன்களும்,12 முதல் 1 மணி வரை 4.67 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜூலை 30ஆம் தேதி 57.51 லட்சத்துக்கும் அதிகமான ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜூலை 29ஆம் தேதி 43 லட்சமாகவும், ஜூலை 28ஆம் தேதி 36 லட்சத்துக்கும் அதிகமாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நாடு முழுவதும் 5.54 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
அபராதம்
உரிய தேதிக்கு முன் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், ரூ.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ரூ.1,000 அபராதமும் செலுத்தி டிசம்பர் 31க்குள் வருமானவரி தாக்கல் செய்து கொள்ளலாம்.
1 சதவீத வட்டி
டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு ரிட்டன் தாக்கல் செய்தால் மாதத்துக்கு 1 சதவீத வட்டி விதிக்கப்படும். நிலுவைத் தேதி. வரி செலுத்துவோர் ஐடி சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குப் பிறகு ஐடிஆரை வழங்கினால், எந்தத் தலைப்பின் கீழும் தங்கள் இழப்பை முன்னெடுத்துச் செல்லத் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications