சுவீடனின் தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் தான் எரிக்சன். அந்நிறுவனத்திடமிருந்து சாதனங்களை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை திருப்பிச் செலுத்த தவறிவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்.
இந்த விவகாரம் தொடர்பாக எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இதுதொடர்பான வழக்கில் அனில் அம்பானியை குற்றவாளி என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், எரிக்சன் நிறுவனத்துக்கு பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அப்படி செலுத்தவில்லை எனில் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முகேஷ் அம்பானி செலுத்தினார்
இதைத்தொடர்ந்து, எரிக்சனுக்கு வழங்க வேண்டிய தொகை 550 கோடி ரூபாய் மற்றும் வட்டித் தொகை 21 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் 571 கோடி ரூபாயாக, அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி செலுத்தியதாகவும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் அனில் அம்பானி அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், நீட்டா அம்பானிக்கும் நன்றியை தெரிவித்தும் இருந்தார்.
சொத்துக்களை குத்தகைக்கு விட்டதன் மூலம் நிதி
சரி அப்படி என்றால் அந்த தொகையினை எப்படித் தான் முகேஷ் அம்பானி செலுத்தினார் வாருங்கள் பார்க்கலாம். சீன வங்கிகளுடனான நிதி பிரச்சனைக்கு மத்தியில் அனில் அம்பானி சமர்பித்த ஆவணங்களின் படி, அனில் அம்பானியின் சில கார்ப்பரேட் சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் தான் அந்த தொகை செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட முறையில் எந்த நிதியும் கொடுக்கவில்லை
இது குறித்து அனில் அம்பானியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் அதனை உறுதியும் படுத்தியுள்ளார். ஆக சொத்துகளை குத்தகைக்கு விட்டதன் மூலமே அந்த தொகை திரட்டப்பட்டுள்ளது. எந்த நிதியும் வழங்கப்படவில்லை. முகேஷ் அம்பானிக்கு அனில் அம்பானி எந்த தனிப்பட்ட முறையில் எந்த பரிசும் அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மலையளவு கடனை அடைக்க முடியாது
எனினும் இது குறித்து அனில் அம்பானி தரப்பிலோ அல்லது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இரு குழுக்களின் தரப்பிலும், அம்பானி சகோதரர்களுக்கிடையேயான உறவுகள், கடனை செலுத்தும் அளவுக்கு இல்லை. அதோடு தம்பியின் மலையளவு கடனை செலுத்தும் அளவுக்கு, அண்ணன் முகேஷ் அம்பானி என்றும் கூறியுள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications