இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி என்பதும் அவருக்கு ஏற்கனவே மத்திய அரசு பாதுகாப்பு அளித்து உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்து இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு
பிரபலமான தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மத்திய அரசு பாதுகாப்பை வழங்கி வருகிறது என்பது தெரிந்ததே. எக்ஸ், ஒய், இசட், இசட் பிளஸ் மற்றும் கருப்பு பூனை என ஐந்து வகையான பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இசட் பிளஸ் பாதுகாப்பு
இந்த ஐந்து பிரிவுகளில் இசட் பிளஸ் பாதுகாப்பு தான் மிகவும் உயர்ந்த பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பு பிரிவில் 10 கமாண்டோ படையினர் உள்பட 55 பேர் இருப்பார்கள் என்பதும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட ஒரு சிலருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ்
இந்நிலையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அம்பானி இல்லத்திற்கு பாதுகாப்பு
ஏற்கனவே முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு கார்
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இல்லம் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை செய்ததில் வாஸ் என்பவர் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னரே அம்பானியின் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானி இல்லம்
தொழிலதிபர் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது மட்டுமின்றி அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications