இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழுமம் தற்போது ஆன்லைன் மற்றும் ரீடைல் வர்த்தகத்தில் மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ளது, இதேபோல் சோலார் மின்சாரம், எலக்ட்ரிக் கார், ஸ்டீல் உற்பத்தி எனப் பல துறையில் நீண்ட காலத் திட்டத்தை வகுத்துச் சிறப்பான வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
இந்த முக்கியமான மாற்றத்திற்குப் பின் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் அவர்களின் நிர்வாக முடிவுகள் தான் என்றால் மிகையில்லை.
சந்திரசேகரனுக்கு ஜாக்பாட்
இந்நிலையில் சந்திரசேகரனின் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் மீண்டும் அவரே தொடர அனைத்து விதமான தகுதிகளைப் பெற்று நிர்வாகம் ஒப்புதல் அளிக்கக் காத்துக்கொண்டு இருக்கிறது.
டாடா சன்ஸ் நிர்வாகம்
டாடா சன்ஸ் குழுமத்திற்கு நெருங்கிய பல அதிகாரிகள் அளித்த தகவல்கள் படி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் சந்திரசேகரன் அவர்களை நியமிக்க அனைத்து தரப்பினரின் ஆதரவு இருப்பதாகவும், குறிப்பாக டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மற்றும் டாடா சேர்மன் ரத்தன் டாடா ஆகியோரின் ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பணிகாலம் நீட்டிப்பு
சமீபத்தில் டாடா குழுமத்தில் சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் செய்த மாற்றங்கள், அதன் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி ஆகியவை டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவால் அதிகளவில் பாராட்டப்பட்டது. இதன் வாயிலாகச் சந்திர சேகரன் 2வது முறையாகப் பதவியில் அமரப்போவது உறுதியாகியுள்ளது.
எதிர்கால வளர்ச்சி
சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் டாடா குழுமத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. இது மட்டும் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்குத் தடையாகவும், சுமையாகவும் இருக்கும் பலவற்றைச் சீர்படுத்தி மறுசீரமைப்புச் செய்துள்ளார்.
சைரஸ் மிஸ்திரி வழக்கு
இதுபோல் சைரஸ் மிஸ்திரி தொடுத்த வழக்கில் டாடா சன்ஸ் வெற்றிபெற மிகவும் உறுதுணையாகவும், திறம்படச் செயல்பட்டது டாடா குழுமத் தலைவர்கள் மட்டும் அல்லாமல் நாட்டின் பிற நிறுவனத் தலைவர்களும் வெகுவாகப் பாராட்டினர்.
10 லட்சம் கோடி ரூபாய்
என்.சந்திரசேகரன் தலைமையில் டாடா குழும நிறுவனங்களின் பங்குகளின் மொத்த மதிப்பு மே மாதம், வரலாற்றில் முதல் முறையாக 10 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தாண்டியுள்ளது புதிய சாதனை படைத்தார். இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications