IT துறைக்கே இப்படி ஒரு நிலையா.. ஊழியர்களின் வேலையை காப்பாற்ற அரசின் உதவியை நாடும் நாஸ்காம்..!

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் ஊழியர்களின் வேலைகளை காப்பாற்ற அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் நாஸ்காம் பெஞ்ச் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உரிமைகளுடன் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்கப்பட வேண்டும் என்றும் நாஸ்காம் பரிந்துரைத்துள்ளது.

இது தவிர இங்கிலாந்தினைப் போலவே ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தவும், நாஸ்காம் அரசிடம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பெஞ்ச் ஊழியர்கள் யார்?

பெஞ்ச் ஊழியர்கள் யார்?

அது சரி அதென்ன பெஞ்ச் ஊழியர்கள்? பெஞ்ச் ஊழியர்கள் என்பது நிறுவனத்தின் ஒரு பகுதி ஊழியரைக் குறிக்கிறது. அவர்கள் தற்போதைக்கு எந்தவொரு திட்டத்திலும் வேலை செய்யவில்லை. ஆனால் அவர்கள் பட்டியலில் உள்ளது. ஆனால் அவர்கள் வழக்கமான சம்பளத்தை பெறுகிறார்கள்.

இங்கிலாந்தினை போல செய்யுங்கள்

இங்கிலாந்தினை போல செய்யுங்கள்

நாஸ்காம் இங்கிலாந்தினைப் போல ஒரு திட்டத்தினை பரிந்துரைத்துள்ளது. இங்கு லாக்டவுன் செய்யப்பட்ட காலத்தில் ஊழியர்கள் நிறுவனத்துடனும் இருக்க முடியும். ஆனால் சம்பளத்தினை எடுக்க முடியாது. மேலும் அந்த காலகட்டத்தில் சம்பளத்தில் 50% அரசாங்கமே செலுத்துகிறது. ஆனால் நிறுவனத்திடம் இருந்து எந்த வழங்கலும் இருக்காது.

உடனடி தேவை

உடனடி தேவை

மேலும் நாஸ்காம் ஒரு குறிப்பிட்ட ஊழியர்கள் மற்றும் பிஎஃப் பங்களிப்புகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் பங்களிக்குமாறும் அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஏப்ரல் 15-க்கு பிறகு வேலை இழப்புகளை தவிர்க்க இது உடனடியாக தேவை என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.

சம்பள செலவு

சம்பள செலவு

ஐடி துறையில் அதிகபட்சம் 70% பங்கு வகிக்கும் BPM/GIC திறனினால் இயங்குகின்றன. ஆனால் மீதமுள்ள பகுதிகளில் 20% பேர் வீட்டிலேயே இருப்பதாகவும் கருதப்படுகிறது. அது மிகப்பெரிய எண்ணிக்கையாக இருப்பதால், சம்பள செலவுகளும் அதிகமாக இருக்கும் என்று அரசாங்கத்திடம் நாஸ்காம் கூறியுள்ளது.

பணியில் பல ஊழியர்கள்

பணியில் பல ஊழியர்கள்

IT/ BPM துறையில் மட்டும் 4 மில்லியனுக்கு அதிகமான ஊழியர்கள் உள்ளனர். இவற்றில் சுமார் ஒரு மில்லியன் ஊழியர்கள் BPM துறையிலும், மற்றொரு மில்லியன் நிதித்துறையிலும், கணக்கியல், ஹெச் ஆர், வினியோக சங்கிலி என பல சலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பலர் வேலை இழக்கும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

குறைந்து வரும் தேவை

குறைந்து வரும் தேவை

இது தவிர ஜிஐசி-க்கள் இந்தியாவின் உலகளாவிய நிறுவனங்களின் மையங்கள். அவற்றின் பெற்றோர் நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இதே சேவையினை செய்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது உலகெங்கிலும் வணிகம் வீழ்ச்சியடைந்து வருவதால், அத்தகைய சேவைகளுக்கான தேவையும் குறைந்துள்ளது.

பல ஊழியர்கள் பாதிப்பு

பல ஊழியர்கள் பாதிப்பு

நாஸ்காம் தரவின் படி, ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து ஒருவர் வெளியேறினால், சுமார் 4 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு மாதத்திற்கு 12,000 ரூபாய் அடிப்படை ஊதியம் பெறுவார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆக அரசாங்கமும் தொழில் துறையும் இந்த நேரத்தில் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் நாஸ்காம் கேட்டுக் கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+