பிரதமர் மோடியின் கணவை நனவாக்கும் பொருட்டு நாடு முழுவதும் டிஜிட்டல் சேவைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அதிலும் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் பயன்பாட்டை உபயோகப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் டிஜிட்டல் சேவைகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
24 மணி நேரமும் நெஃப்ட் சேவை
அந்த வகையில் நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த அதிரடி சேவையானது வரும் டிசம்பர் 16 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அதிரடி முடிவானது சில்லறை பணம் செலுத்துதல் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி முன்னரே அறிவித்திருந்தது கவனிக்கதக்கது.
இப்போது எவ்வளவு நேரம்?
ரிசர்வ் வங்கியின் சில்லறை செலுத்துதல் சிஸ்டம் மூலமாக தற்போது, பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். நெஃப்ட் சிஸ்டம் மூலமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். முன்னதாக கடந்த ஜூன் மாதம் முதல், ஆர்.டி.ஜி.எஸ். எனப்படும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) மற்றும் நெஃப்ட் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் கிடையாது என்று அறிவித்தது. இந்த நிலையில் இத்தகையதொரு சலுகையை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து நாட்களும் ஆன்லைன் சேவை
நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் நெஃப்ட் மூலம் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆர்.டி.ஜி.எஸ், நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ் ஆகிய மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மின்னணு முறையில் பணப்பரிமாற்ற செய்யமுடியும்.
விடுமுறை நாட்களிலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்
ஆனால் வங்கி நேரங்களுக்கு மட்டுமே, இந்த சேவையை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்நிலையில், நெஃப்ட் சேவையில் தற்போது இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் ஊக்குவிப்பு சேவையானது விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் நெஃப்ட் சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா கனவு
பிரதமர் மோடியின் கனவை நினைப்படுத்தும் விதமாக இந்த சேவை நீட்டிப்பானது வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இனி விடுமுறை நாட்கள், வங்கி நேரம் முடிவு என இல்லாமல், நமக்கு ஏற்றாற்போல் விருப்பம் போல பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
இது முழுக்க முழுக்க மக்கள் இணைய சேவையை பயன்படுத்தும் விதமாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications