இந்தியாவில் நெஃப்ட் எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை சேவை, வரும் மே 23 அன்று, 14 மணி நேரம் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானது சற்று பரப்பரப்பினை ஏற்படுத்தியிருந்தாலும், மற்ற ஆன்லைன் சேவைகள் வழக்கம்போல கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறவுள்ள நிலையில் நெஃப்ட் சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஞாயிற்றுகிழமையன்று வருவதால், வாடிக்கையாளரகள் தங்களது பணபரிவர்த்தனையை முன் கூட்டியே திட்டமிடலாம்.
ஆன்லைன் சேவை
பொதுவாக இன்றைய நெருக்கடியான காலகட்டங்களில் ஆன்லைன் சேவையானது அத்தியாவசியமான சேவைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் வங்கி வேலை நாள் இல்லாத நாளில் இந்த சேவை தடை படலாம் என்பதால் உங்களது பரிவர்த்தனைகளை பாதிக்கக்கூடும். ஏனெனில் வங்கி வேலை நாளாக இருந்தால் கூட, வங்கிகளில் சென்று பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். ஆனால் விடுமுறை நாள் என்பதால், சேவை பாதிகப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்டிஜிஎஸ் சேவை உண்டு
ஆக வாடிக்கையாளர்கள் தங்களது பர்வர்த்தணைகளை திட்டமிட்டு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த சமயத்தில் ஆர்டிஜிஎஸ் சேவை தொடர்ந்து பெற முடியும். வாடிக்கையாளார்கள் இதன் மூலம் பாதுகாப்பான பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம். கடந்த மாதத்தில் இதே போன்று ஆர்டிஜிஎஸ் சேவைக்கு தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெஃப்ட் 24 மணி நேர சேவை
முன்னதாக நெஃப்ட் சேவையானது காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் அதன் பின்னர் 24*7*365 என்ற சேவையை கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் வாரத்தின் 7 நாட்களும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையை வாடிக்கையாளர்கள் பெற்று வந்தனர்.
பாதுகாப்பான சேவை
நெஃப்ட் சிஸ்டம் மூலமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதோடு 24 மணி நேரமும் செய்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான பரிவர்த்தனை என்பதால், இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. ஆக இன்னும் தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்துவதும் நல்ல விஷயம் தான்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications