இந்தியாவில் இருக்கும் முன்னணி செயலிகள் கடந்த சில நாட்களாகவே கூகிள் ப்ளே ஸ்டோரில் மூலம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு எதிராக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு நாம் நாட்டுக்கெனச் சொந்தமாக ப்ளே ஸ்டோர் உருவாக்கத் திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறது என அரசு தரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு திட்டமிட்டபடி இந்தியாவில் ப்ளே ஸ்டோர் உருவாக்கினால் கூகிள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பை ஏற்படும்.
ஏற்கனவே சீன ஸ்மார்ட்போன்கள் தனக்கெனத் தனிப்பட ப்ளே ஸ்டோர் உருவாக்கி வரும் நிலையில் இந்தியாவில் இந்த முடிவு, இன்னும் பல நாடுகளைத் தனி ப்ளே ஸ்டோர் அமைக்க ஊக்குவிக்கும்.
பிரதமர் மோடி
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, புதிதாக மொபைல் சேவை ஆப் ஸ்டோர் அமைக்கத் திட்டமிட்டு வருகிறது என முன்னணி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால் அரசு தரப்பிலோ அல்லது அரசு அதிகாரிகளோ இதுவரை நேரடியாக எவ்விதமான தகவல்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
97 சதவீத சந்தை
இந்தியா டிசம்பர் 2019 தரவுகள் படி சுமார் 1.15 பில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்கள் கொண்டு உலகிலேயே 2வது மிகப்பெரிய டெலிகாம் சந்தையாக உள்ளது. இந்த 1.15 பில்லியன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், சுமார் 97 சதவீதம் பேர் ஆண்டுராய்டு இயங்கு தளம் கொண்ட போன்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.
மிகப்பெரிய சந்தை
கிட்டதட்ட 1 பில்லியன் வாடிக்கையாளர்கள் ஆண்டுராய்டு இயங்கு தளம் கொண்ட போன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், இது மிகப்பெரிய சந்தை. இந்த முக்கியமான சந்தையில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களோ அல்லது டெக் நிறுவனங்கள் இல்லாமல் இருப்பது பெரிய அளவிலான வர்த்தகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கொடுப்பதாகப் பொருள்.
கட்டணம்
இந்தியாவில் ஆண்டுராய்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கையில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இந்தச் சந்தையில் நுழைந்து வர்த்தகத்தைக் கைப்பற்ற வேண்டும்.
இதேபோல் கூகிள் ஆப்பிள் போன்று 30 சதவீதம் கட்டணத்தை இந்திய ஆப் ஸ்டோர் விதிக்கக் கூடாது எனத் திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் இருந்து சில உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.
ப்ரிஇன்ஸ்டால்
புதிகாக உருவாக்கப்பட உள்ள மொபைல் சேவை ஆப் ஸ்டோர், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஆண்டுராய்டு போன்களில் கட்டாயம் ப்ரிஇன்ஸ்டாலாக இந்த இந்திய அரசின் ப்ளே ஸ்டோர் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.
ஆதிக்கம்
இந்திய அரசின் இந்த முயற்சியின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், புதிய துறையில் வர்த்தக வாய்ப்பாக அமையும். இந்தியா போன்ற வேகமாக வளரும் டெலிகாம் சந்தையில் இந்திய நிறுவனத்தின் ஆதிக்கம் இன்றைய சர்வதேச வர்த்தகச் சூழ்நிலையில் கட்டாயம் தேவை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications