வாட்ஸ்அப் கால், ஜூம் உள்பட பல இன்டர்நெட் அழைப்புகளுக்கு தற்போது கட்டணங்களை நுகர்வோர்கள் செலுத்துவதில்லை என்பது தெரிந்ததே. இன்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டும் போதும், ஆடியோ வீடியோ அழைப்புகளை இலவசமாக பெறலாம்.
இந்த நிலையில் வாட்ஸ்அப் கால், ஜூம் உள்பட அனைத்து இன்டர்நெட் அழைப்புகளையும் தொலைத்தொடர்பு துறையின் கீழ் கொண்டுவர புதிய மசோதா இயற்றப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வாட்ஸ்அப், ஜூம் உள்பட அனைத்து இன்டர்நெட் சேவை நிறுவனங்களும் மத்திய அரசிடம் லைசென்ஸ் எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
தொலைத்தொடர்புத்துறை
அழைப்பு மற்றும் செய்தியிடல் சேவைகளை வழங்கும் வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ போன்ற சேவைகள் இந்தியாவில் செயல்பட உரிமங்கள் தேவைப்படும் நிலை வரலாம் என்றும், இவை அனைத்தும் தொலைத்தொடர்பு சேவைகளின் வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய மசோதா
தகவல் தொடர்பு சேவைகள், இணைய அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் ஒளிபரப்பு சேவைகளை உள்ளடக்கிய தொலைத்தொடர்பு சேவைகளின் வரையறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த புதிய மசோதா நிறைவேற்றப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
KYC விதிமுறை
அனைத்து இணைய அழைப்பு மற்றும் செய்தியிடல் பயன்பாடுகளும் தொலைத்தொடர்பு உரிமத்தின் கீழ் வரும்போது KYC விதிமுறையின் கீழ் வரவேண்டும் என்று புதிய மசோதாவில் கூறப்படும். இதனால் பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், அழைப்பை யார் செய்கிறார்கள் என்பதை நுகர்வோர் அறிந்து கொள்ள முடியும் என்றும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார்.
புதிய மசோதாவின் நோக்கம்
வெவ்வேறு தளங்களில் இருந்து செயல்படும் ஒவ்வொரு தளமும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறையின் கீழ் வர வேண்டும் என்பதே இந்த புதிய மசோதாவின் நோக்கம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பின் செயல்முறையாக இருக்கும் என்றும் அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார்.
சிறைத்தண்டனை
மேலும் தொலைத்தொடர்பு சேவைகளை பெறுவதற்கு தவறான அடையாளத்தை கொடுத்தால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க புதிய மசோதா முன்மொழிகிறது. அதேபோல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு தற்போது விதிக்கப்படும் ரூ.50 கோடி என்ற அதிகபட்ச அபராதத்தை ரூ.5 கோடியாக குறைக்கவும் இம்மசோதா முன்மொழிகிறது.
புதிய மசோதா எப்போது?
தொலைத் தொடர்பு துறையின் புதிய மசோதா அடுத்த 6 அல்லது 10 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அனைத்து தரப்பு ஆலோசனையும் பெற்று அதன் பின் இந்த மசோதா இறுதி செய்யும் என்றும் நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications