Toll Plaza-வில் புதிய மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் பணத்தை நீட்டினால் எதுவும் நடக்காது.. FASTag - UPI இனி பிரதானம்

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் முறை முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பணம் ஏற்கப்படாது என்று அறிவித்துள்ளது.

இதன்படி, சுங்கக் கட்டணம் செலுத்த FASTag அல்லது UPI (கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்றவை) மூலம் மட்டுமே இனி பேமெண்ட் மேற்கொள்ள முடியும்.

Toll Plaza-வில் புதிய மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் பணத்தை நீட்டினால் எதுவும் நடக்காது..!!

இந்த மாற்றம் நீண்ட வரிசைகளில் நிற்கும் வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கவும், போக்குவரத்தை இயக்கத்தை விரைவுபடுத்தவும், பண பரிமாற்றத்தை குறைக்கவும், முழுமையான டிஜிட்டல் முறையை உறுதி செய்யவும் உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தற்போது 98%க்கும் மேற்பட்ட வாகனங்கள் FASTag பயன்படுத்தி வருகின்றன. எனவே, இந்த மாற்றம் பெரும்பாலானோருக்கு சிரமமாக இருக்காது. தற்போது FASTag இல்லாதவர்கள் பணமாக செலுத்தினால் இரட்டை கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே UPI மூலம் செலுத்தினால் 1.25 மடங்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 2026 முதல் பணம் செலுத்துவது முற்றிலும் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FASTag என்பது வாகன கண்ணாடியில் ஒட்டப்படும் சிறிய ஸ்டிக்கர் ஆகும். சுங்கச்சாவடியை கடக்கும் போது பாஸ்டேக் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே கட்டணம் கழிக்கப்படும். கையால் நிறுத்தி பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் இருந்து தினசரி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் லட்சக்கணக்கானோருக்கு இந்த மாற்றம் மிக முக்கியமானது. சென்னை-பெங்களூரு, சென்னை-திருச்சி, கோயம்புத்தூர்-சேலம் போன்ற பிரபல பாதைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இனி பணம் செலுத்த முடியாது. FASTag அல்லது UPI மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் FASTag பயன்பாடு ஏற்கெனவே அதிகம் உள்ளதால், பெரும்பாலானோருக்கு இது சிரமமாக இருக்காது. ஆனால் FASTag இல்லாதவர்கள் அல்லது பேலன்ஸ் இல்லாதவர்கள் இரட்டை சுங்கக் கட்டணம் அல்லது 1.25 மடங்கு செலுத்த வேண்டியிருக்கும்.

மொத்தத்தில், ஏப்ரல் 1, 2026 முதல் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் முழுமையாக டிஜிட்டல் ஆக மாற உள்ளன. இது பணமில்லா இந்தியாவை நோக்கிய முக்கிய படியாகும். FASTag மற்றும் UPI-யை பயன்படுத்துவது எளிது, பாதுகாப்பானது மற்றும் விரைவானது என்பதால் தேசிய நெடுஞ்சாலை துறை இதை மக்கள் மத்தியில் பயன்பாடுக்கு கொண்டு வந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+