இந்தியாவில் தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் வொர்க் ப்ரம் ஹோம் என்பது இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது.
ஆனால் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம், போட்டி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தும் விதமாகச் சீனியர் அதாவது உயர் பதவிகளில் இருக்கும் ஊழியர்களை அனைத்து நிறுவனத்திலும் அலுவலகத்திற்கு அழைத்து வருகிறது.
இந்த நிலையில் புதிதாகத் தேர்வு செய்யப்படும் ஊழியர்கள் முக்கியமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வொர்க் ப்ரம் ஹோம் ஆப்ஷன்
இந்திய நிதியியல் சேவை சந்தையில் முன்னணி நிறுவனம் ஒன்று தற்போது தனது நிறுவனத்திற்காகத் தலைமை தொழில்நுட்ப அதிகாரியைத் தேர்வு செய்து வருகிறது. இந்தத் தேடலில் இறுதிக்கட்டம் வரை தேர்வான இருவர் வொர்க் ப்ரம் ஹோம் ஆப்ஷன் வேண்டும் எனக் கேட்டதால் இந்த நிறுவனம் அவர்களை நிராகரித்துள்ளது.
பணி ராஜினாமா
இந்திய நிறுவனங்களில் அதிகளவில் தற்போது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ள நிலையில், பலர் பணியை ராஜினாமா செய்து வரும் நிலையில் பலர் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காகப் பணியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
உயர் பதவி
இது ஆரம்பக்கட்ட ஊழியர்கள், நடுத்தரப் பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு நிர்வாகம் ஏற்றுக்கொண்டாலும், உயர் பதவிகள் மற்றும் உயர்மட்ட நிர்வாகப் பதவிகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வருவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
நிரந்தர வொர்க் பர்ம் ஹோம் சலுகை
இதேபோல் புதிதாகப் பணியில் சேர்க்கப்படும் உயர் அதிகாரிகளுக்கு நிரந்தர வொர்க் பர்ம் ஹோம் சலுகை மறுக்கப்பட்டு வரும் காரணத்தால் இவர்களுக்கான வாய்ப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனவே இது தொடர்ந்து அடுத்தகட்ட பதவிகளில் இருப்பவர்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெசிஷன் அச்சம்
மேலும் முக்கியப் பொருளாதார நாடுகளில் ரெசிஷன் வரும் என்ற அச்சம் அதிகமாக இருக்கும் காரணத்தால் புதிய முதலீடுகள், புதிய திட்டங்கள் வருவது குறையும் நிலையில் புதிய வேலைவாய்ப்புகள் குறைவது மட்டும் அல்லாமல் சந்தையில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் குறைக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே அனைத்துத் தரப்பு ஊழியர்களும் அனைத்து மாற்றங்களுக்கும் தயாராக இருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications