கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்னர் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை ஒடிசா அரசு கைப்பற்றிய நிலையில் அந்த நிலங்களை திரும்ப அளித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் என்ற மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கடற்கரைக்கு அருகில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு சொந்தமான 206 ஏக்கர் நிலத்தை ஒடிசா அரசு கைப்பற்றியது.
அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 6 ஆயிரத்து 900 ஏக்கர் நிலத்தை ஒடிசா அரசு கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா ஸ்டீல்
ஒடிஷா அரசாங்கம் ஒரு முக்கிய ஆலை கட்டுவதற்காக கடந்த 1996ம் ஆண்டு டாடா ஸ்டீல் ஆலைக்கு சொந்தமான 206 ஏக்கர் உள்பட மொத்தம் 6900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.
26 ஆண்டுகள்
இந்த நிலையில் நிலத்தை கைப்பற்றி 26 ஆண்டுகள் ஆகியும் அந்த நிலத்தில் எந்தவித ஆலையையும் ஒடிஷா அரசு தொடங்கவில்லை. இதனை அடுத்து தற்போதைய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் கூடிய நிலையில் டாடா ஸ்டீல் ஆலைக்கு சொந்தமான 206 ஏக்கர் உள்பட அனைத்து கைப்பற்றப்பட்ட நிலத்தையும் திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டது.
திரும்ப ஒப்படைப்பு
பொதுநலன் கருதி கடந்த 26 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த நிலங்களை திருப்பி அளிக்க ஒரிசா அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் எஸ்சி மொகபத்ரா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நிலத்தை மீண்டும் உரியவர்களுக்கு சமர்ப்பிப்பதோடு ஒரு நியாயமான இழப்பீடும் தருவதற்கு சட்டத்தில் உள்ள விதிகளை ஆய்வு செய்ய ஒடிசா அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இழப்பீடு
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கூறிய போது நிலங்களைத் இருப்பது ஒப்படைப்பது மட்டும் போதாது என்றும் உரிய இழப்பீடுகளை நிலம் இழந்தவர்களுக்கு தரவேண்டும் என்றும் அது ஒரு அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளனர்.
சந்திப்பு
இந்த நிலையில் ஒடிசா முதல்வர் பட்நாயக் அவர்கள் டாடா நிறுவனத்தை தங்களது மாநிலத்தில் விரைவு படுத்துமாறு வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. டாடா தலைவர் சந்திரசேகரன் அவர்களை சமீபத்தில் அவர் சந்தித்ததாகவும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் கேட்டு அறிந்ததாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications