ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த திங்கட்கிழமையன்று மட்டும் 4% ஏற்றம் கண்டு, 101 ரூபாய் என்ற உச்சத்தினை தொட்டுள்ளது. இதே கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த நிறுவன பங்கின் விலையானது 55.6% ஏற்றம் கண்டுள்ளது.
இது கடந்த டிசம்பர் மாத தொடக்கம் முதல் கொண்டு 28.6% ஏற்றத்திலும் இந்த பங்கின் விலையானது உள்ளது.
இது நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்து பற்றிய சாதகமான செய்திகளும் வந்து கொண்டுள்ளன.
பங்கு இலக்கு விலை
இதன் காரணமாக இனி எரிபொருட்களின் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனம் இந்த நிறுவனத்தின் மதிப்பினை equalweight என்ற நிலையில் இருந்து overweight என்று மாற்றியமைத்துள்ளது. அதுமட்டும் அல்ல இதன் இலக்கு விலையையும் 84 ரூபாயில் இருந்து, 115 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பும் ஒரு காரணம்
மேலும் அதன் உள்நாட்டு உற்பத்தி விகிதமும் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது. இதன் காரணமாக 2022ம் நிதியாண்டில் அதல் வரிக்கு பிந்தைய லாபம் 30 சதவீதம் அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது. உயரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், உள் நாட்டில் விலை அதிகரிப்பு, கேஸ் விலை அதிகரிப்பு ஆகியவை அதன் பங்கு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் தேவை
கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக எரிபொருட்களுக்கான தேவையும் குறைந்தது. வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. தொழிற்சாலைகள் முடங்கின. இதனால் கச்சா எண்ணெய் விலையும் படு பாதாளத்திற்கே சென்றது. எனினும் தற்போது லாக்டவுனில் முழு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேவையானது மீண்டு வர தொடங்கியுள்ளது.
எண்ணெய் விலை அதிகரிப்பு
ஒரு புறம் தேவை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகின்றது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்து வருகின்றது. ஏனெனில் சுகாதாரம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு மக்கள் தற்போது அதிகளவில் வாகனங்களில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் எரிபொருட்கள் விலையானது வரும் காலத்தில் நிச்சயம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பங்கு விலை
இதன் காரணமாகவே முதலீட்டாளர்கள் எண்ணெய் நிறுவனங்கள் சம்பந்தமான பங்குகளில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஓஎன்ஜிசியின் பங்கு விலையானது பட்டையை கிளப்பி வருகின்றது. எனினும் தற்போது ஓஎன்ஜிசியின் பங்கு விலையானது கிட்டதட்ட 1 சதவீதம் குறைந்து, 100.55 ரூபாயாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications