குழந்தைக்கு கொடுக்கும் பால் புட்டியிலிருந்து, காலில் அணியும் செருப்பு வரையிலும் இந்தியாவில் சீனாவின் ஆதிக்கம் உள்ளது. எனினும் தற்போதைய காலங்களின் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையானது இந்தியாவில் மிக அதிகளவும் உயர்ந்து வருகிறது.
அதிலும் இங்கிருந்து உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஓப்போ (OPPO), இந்தியாவிலும் அதன் கிளையை நிறுவியுள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
இந்த நிலையில் இன்றைய இந்திய மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வரும், ஸ்மார்ட்போன்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஓப்போ நிறுவனம் 2020ம் ஆண்டில் 100 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது எனவும் இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது தவிர சில்லறை விற்பனையிலும் ஒரு ஆக்ரோஷமான உந்துதலை தள்ள இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தில் கவனம்
இது குறித்து ஓப்போ இந்தியாவின் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் துணைத் தலைவர் சுமித் வாலியா கூறுகையில், உற்பத்தியாளர்களின் கவனம் அவர்களின் வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பதாக இருக்கும். இது தவிர உற்பத்தியாளர்கள் இந்தியாவில் 100 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதால், மேக் இன் இந்தியா திட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவர் என்றும் கூறியுள்ளார்.
தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் கவனம்
மேலும் தற்போது இந்தியாவில் 4ஜி சேவை மட்டுமே இருக்கும் நிலையில், இந்த நிறுவனம் 5 ஜி சேவையையினை மேம்படுத்த கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2020 புதுமையான ஆண்டாக இருக்கும்
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு 2020 ஒரு புதுமையான ஆண்டாக இருக்கும் என்றும் எதிர்ப்பாக்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 5ஜி இணைப்பு ஒரு யதார்த்தமாக மாறும் வாய்ப்புகள் காரணமாக, ஸ்மார்ட்போன் உற்பத்தியில் புதுமையான கண்டுபிடிப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது பரிமாற்ற வேகங்களில் 4ஜியை விட 200 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவின் ஆதிக்கம்
இந்தியாவின் ஏற்கனவே கணிசமான அளவு சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தை வகித்து வரும் நிலையில்; சீனா நிறுவனங்களின் அதிரடியான நடவடிக்கைகளினால் இந்தியாவின் இதன் பங்கு இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சீனா நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் வேலை அதிகரிக்கும் என்றாலும், இந்தியா நிறுவனங்கள் சில காணமல் போவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications