அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறலாமோ? என நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர். எனினும் எப்படியேனும் மீண்டு விட மாட்டோமா? என பல வகையிலும் துரிதமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு உதவ சமீபத்தில் தான் பல நாடுகளும் முன் வந்தன.
அப்பாடா ஏதோ கொஞ்ச தூரத்தில் வெளிச்சம் தெரிகிறேதே என எட்டி பார்க்க ஆரம்பித்த பாகிஸ்தானுக்கு, மீண்டும் வெள்ளம் மூலம் பெரிய தடுப்பு போடப்பட்டுள்ளது. இதிலிருந்து எப்படி மீண்டு வருமோ என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த சில வாரங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்த மழை வெள்ளத்தால் 1300 பேருக்குக்கும் மேல் பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
கடுமையான வெள்ளம்
தற்போது தான் துளிர்விடத் தொடங்கிய பாகிஸ்தானை அப்படியே மீண்டும் முடக்கி போடும் விதமாக கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேர்வுகளை எழுத முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் ஊழியர்கள், சரியான உணவுக்கு வழியின்றி தவிக்கும் குழந்தைகள், மக்கள் என பலரையும் இந்த வெள்ளம் வாட்டி வதைத்து வருகின்றது.
பயிர்கள் அழிந்து நாசம்
அது மட்டும் தற்போதைய பருவ பயிர்கள் என பெரும்பாலும் ஏற்கனவே அழிந்துவிட்டன. இதனால் தானியங்கள் மற்றும் உணவு பொருட்களும் பற்றாக்குறை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. பல ஆயிரம் மக்கள் தங்களது வீடு, உடைமைகளை இழந்து நிற்கும் நிலையில், வெள்ளம் வடிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பயிர்களும் அழுகி இழப்பு ஏற்படலாம் என பாகிஸ்தான் மக்கள் கதறுவதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
மோசமான தாக்கம்
குறிப்பாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் குடும்பங்களில் இது மிக பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பாகிஸ்தானில் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 27.3% என்ற அளவுக்கு மிக மோசமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் ரூபாய் மோசமான சரிவினைக் கண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை மிக மோசமான உச்சத்தினை எட்டியிருந்தன.
ஜிடிபி சரிவு
இது பாகிஸ்தான் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாமென அஞ்சப்படுகிறது. ஏனெனில் பாகிஸ்தானின் ஜிடிபியின் 22.7% பங்கு வகிக்கும் விவசாயம் பெரியளவில் சரிவினைக் காணலாம். ஆக இதுவே ஜிடிபியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். ஏற்கனவே அன்னிய செலவாணி கையிருப்பு சரிவினைக் எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு, இது மேற்கொண்டு பின்னடைவாக இருக்கும்.
அன்னிய செலவாணி சரியலாம்
பாகிஸ்தானின் முக்கிய பருத்தி உற்பத்தி செய்யும் பகுதியான சிந்துவில் கிட்டதட்ட 80% பயிர்கள் நாசமாகி விட்டன. இது மொத்த பாகிஸ்தான் பருத்தி உற்பத்தியில் 30% ஆகும். பாகிஸ்தானின் அன்னிய செலவாணியினில் பருத்தி முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், இது மேற்கொண்டு பின்னுக்கு தள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications