உலகம் முழுவதும் அதிகரித்து இருக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் பொருளாதார சரிவில் சக்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே திவாலானதாக அறிவிக்கப்பட்ட இலங்கை மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டின் நிலவரத்தை இந்திய பொருளாதார வல்லுனர்களும், பங்குசந்தை முதலீட்டாளர்களும் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அந்நாட்டு பங்குச்சந்தையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், அரசுக்கு கூடுதலான வருவாயை திரட்டும் நோக்கிலும், அந்நாட்டின் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் மீது 10 சதவீதம் சூப்பர் டாக்ஸ் விதிக்கப்பட உள்ளதாக ஜூன் 24ஆம் தேதி அறிவித்தார்.
ஷெபாஸ் ஷெரீப்
ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ள 10 சதவீத சூப்பர் டாக்ஸ் என்பது சிமெண்ட், ஸ்டீல், சர்க்கரை, எண்ணெய் மற்றும் எரிவாயு, உரங்கள், LNG டெர்மினல்கள், டெக்ஸ்டைல், வங்கி, ஆட்டோமொபைல் மற்றும் சிகரெட்டுகள் ஆகிய துறை சார்ந்த நிறுவனங்கள் மீது விதிக்கப்பட உள்ளது.
பொருளாதாரம்
இந்த அறிவிப்புக்கு பின்பு அந்நாட்டு மக்களிடம் பேசிய ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்லும் முன்பு இந்த முக்கியமான எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் பங்குச்சந்தை
ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு பின்பு பாகிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சுமார் 2000 புள்ளிகள் வெறும் 22 நிமிடத்தில் சரிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் முக்கிய வர்த்தக வர்த்தக குறியீடான KSE-100 2053 புள்ளிகள் சரிந்து 4.8 சதவீத சரிவை பதிவு செய்தது.
வரி உயர்வு
இதேவேளையில் பாகிஸ்தான் நாட்டில் தற்போது கார்பரேட் இன்கம் டாக்ஸ் 50 சதவீதமாகவும், முதலீட்டாளர்கள் வரி 55 சதவீதமாக உயர்ந்துள்ளது என பாகிஸ்தான் நாட்டின் Alpha Beta Core நிறுவனத்தின் சிஇஓ குர்ரம் ஷெஹ்சாத் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் இது பாகிஸ்தான் வரலாற்றிலேயே அதிகமான வரி விதிப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடி
பாகிஸ்தான் அரசு அந்நாட்டு நிதி நெருக்கடியை சமாளிக்க பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, வரி உயர்வு என பலவற்றை அதிகரித்துள்ளது.
41 பில்லியன் டாலர்
அடுத்த 12 மாதத்தில் பாகிஸ்தான் தனது கடன்களை அடைக்கவும், இறக்குமதிக்காகவும் சுமார் 41 பில்லியன் டாலர் வேண்டும். இதேவேளையில் பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி 10 பில்லியன் டாலருக்கு கீழ் சரிந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications